கோவையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற நபரின் கால் துண்டிப்பு.

கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த மகேஷ் (52). இவர் இன்று கோவை இரயில் நிலையத்தில் ஒன்றாம் பிளாட்பாரத்தில் ரயில் எஞ்சின் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதில் அவரது கால் துண்டானது. ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை ரயில் நிலையத்தின் முதல் நடைமேடையில் காத்திருந்த ஒருவர் திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (52). இவர் இன்று கோவை ரயில் நிலையத்தில் உள்ள முதலாம் பிளாட்பாரத்தில் ரயிலுக்காக காத்திருந்ததாக தெரிகிறது. அப்போது, யாரும் எதிர்பாராத நேரத்தில்

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் செல்லும் அதிவிரைவு ரயில் முன்பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

சக பயணிகள் அவரை தடுக்க முயன்றும், இரயில் முன் பாய்ந்த மகேஷ், ரயிலின் அடியில் சிக்கிக் கொண்டார். தகவலறிந்த ரயில் லோகோ பைலெட் ரயிலை உடனடியாக ரயிலை நிறுத்தினார்.

இதையடுத்து, அங்கிருந்த ரயில்வே ஊழியர்கள், பொதுமக்கள், ரயில்வே போலீசார் ரயிலின் அடியே சிக்கிய மகேஷை மீட்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இடது கால் துண்டான நிலையில் மீட்கப்பட்ட மகேஷ்,108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவசரம் கருதி, 108 ஆம்புலன்ஸ் ரெயில்வே பிளாட்பாரம் வரை வந்து, பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...