ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள நபரை தேடி வருகிறார்கள். இவர் மீது ஏற்கனவே கோவை மாநகர பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை: கோவை மாவட்டத்தில் மது குடிக்க பணம் கேட்டு நண்பரை குத்திய வாலிபரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
கோவை ராமநாதபுரம் சுங்கம் பைபாஸ் சாலையை சேர்ந்தவர் செல்வம் (34). பெயிண்டர். இவர் சிங்காநல்லூரில் இருந்து ராமநாதபுரத்துக்கு பேருந்தில் வந்தார். அப்போது அதே பேருந்தில் ஏற்கனவே பழக்கமாக மணிகண்டன் என்ற குண்டு மணிகண்டன் அதே பேருந்தில் வந்துள்ளார்.
அப்போது மணிகண்டன், செல்வத்திடம் மது குடிக்க பணம் கேட்டார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். பேருந்துராமநாதபுரம் சிந்தாமணி பேருந்து நிறுத்தம் வந்ததும், செல்வம் பேருந்தைவிட்டு இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றார்.
அப்போதும் அவரை மணிகண்டன் பின் தொடர்ந்து சென்றார். திடீரென அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மிரட்டி பணம் கொடுக்கும்படி கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த குண்டு மணிகண்டன் தான் வைத்திருந்த கத்தியால் செல்வத்தை குத்தினார்.
பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாகச் சென்றவர்கள் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில்சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள குண்டு மணிகண்டனை தேடி வருகிறார்கள். இவர் மீது ஏற்கனவே கோவை மாநகர பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது.
கோவை ராமநாதபுரம் சுங்கம் பைபாஸ் சாலையை சேர்ந்தவர் செல்வம் (34). பெயிண்டர். இவர் சிங்காநல்லூரில் இருந்து ராமநாதபுரத்துக்கு பேருந்தில் வந்தார். அப்போது அதே பேருந்தில் ஏற்கனவே பழக்கமாக மணிகண்டன் என்ற குண்டு மணிகண்டன் அதே பேருந்தில் வந்துள்ளார்.
அப்போது மணிகண்டன், செல்வத்திடம் மது குடிக்க பணம் கேட்டார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். பேருந்துராமநாதபுரம் சிந்தாமணி பேருந்து நிறுத்தம் வந்ததும், செல்வம் பேருந்தைவிட்டு இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றார்.
அப்போதும் அவரை மணிகண்டன் பின் தொடர்ந்து சென்றார். திடீரென அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மிரட்டி பணம் கொடுக்கும்படி கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த குண்டு மணிகண்டன் தான் வைத்திருந்த கத்தியால் செல்வத்தை குத்தினார்.
பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாகச் சென்றவர்கள் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில்சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள குண்டு மணிகண்டனை தேடி வருகிறார்கள். இவர் மீது ஏற்கனவே கோவை மாநகர பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது.