கோவையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றுபவர் காளிமுத்து (29). இவர் அரசு பொருட்காட்சி நடக்கும் இடத்தில் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது தனது துப்பாக்கியால் வலதுபுற வயிற்று பகுதியில் தன்னை சுட்டுக்கொண்டதாக தெரிகிறது.
கோவை: கோவை சிறைச்சாலை வளாகத்தில் நடைபெறும் பொருட்காட்சியில் பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த, காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கோவையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றுபவர் காளிமுத்து (29). இவர் அரசு பொருட்காட்சி நடக்கும் இடத்தில் பாதுகாப்பு பணியில் இன்று ஈடுபட்டிருந்தார். அப்போது தனது துப்பாக்கியால் வலதுபுற வயிற்று பகுதியில் தன்னை சுட்டுக்கொண்டதாக தெரிகிறது.
வயிற்றில் துப்பாக்கியால் சுட்ட நிலையில் பின் பக்கமாக துப்பாக்கி குண்டு துளைத்து வெளியே வந்துள்ளது. உடனடியாக, காவலர் காளிமுத்து சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
இளம் வயது காவலர் ஒருவர் பணியின் போது, துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.