ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலி: பன்னாட்டு குளிர்பானங்களுக்கு தடை விதித்த விஎல்பி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமம்

தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு மீது விதிக்கப்பட்டுள்ள தடையினை நீக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் மாணவர்களால் நடத்தப்பட்ட போராட்டத்தில் ஒரு பகுதியாக, பன்னாட்டு குளிர்பானமான கொக்ககோலா, பெப்சி உள்ளிட்ட பானங்களை இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் தடைசெய்ய வேண்டும் என மாணவர்கள், இளைஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து, பல வனிகர்களும் மாணவர்களின் விழிப்புணர்வுக்கு ஆதரவு தெரிவித்து இனி தங்களது வனிகவளாகத்தில், உணவு விடுதியில் இதுபோன்ற பன்னாட்டு குளிர்பானங்களை விற்பதை தடைசெய்வதாகவும், இளநீர் உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரியமான பானங்களை விற்பனை செய்யப்போவதாகவும் அறிவிப்புகள் வெளியிட்டுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக கோவையில் செயல்பட்டு வரும் விஎல்வி கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாகம் தற்போது தங்களது உணவு விடுதியில் பன்னாட்டு குளிர்பானங்களுக்கு தடை விதித்து அறிவித்துள்ளது.

மேலும், கொக்ககோலா, பெப்சி மற்றும் அந்நிறுவனத்தின் குடிநீர் பாட்டில்கள் கூட விற்பனை செய்யப்பட மாட்டாது. மேலும், எலுமிச்சை, ஆரஞ்சு பழச்சாறு, மற்றும் பல பாரம்பரியமான பானங்களை விற்க முடிவெடுத்துள்ளதாக அக்கல்வி நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், இதேப்போன்று ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமமும் இனி வரும் காலங்களில் தங்களது கல்வி நிறுவனங்களில் பெப்சி, கொக்க கோலா உள்ளிட்ட பன்னாட்டு பானங்களை தடை செய்வதாகவும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

Newsletter

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...