ஏசிசி வித்யாசாரதி கல்வி உதவித் தொகை திட்டத்தினை கோவை மாநகராட்சி ஆணையர் இன்று துவக்கி வைத்தார்


வித்யாசாரதி தனது ஆலைமட்ட முயற்சியாக ஏசிசி மதுக்கரை சிமெண்ட் ஆலையானது "ஏசிசி வித்யாசாரதி கல்வி உதவித்தொகைத் திட்டம்" என்னும் திட்டத்தினை துவங்கியது.



ஏசிசி மதுக்கரை சிமெண்ட் ஆலை இயக்குநர் கே.வம்சிதர் ரெட்டி, டி.என்.கோபகுமார், முதன்மை மேலாளர் வினித் ஏ.நாயர் மற்றும் இணை மேலாளர் எம்எஸ்டிஎல் ஆகியோர் முன்னிலையில் கோவையில் நடைபெற்ற இதன் துவக்கி நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இத்திட்டத்தினை துவக்கி வைத்தார்.

இந்தத் தொழில்நுட்ப கல்வி உதவியானது கோவை மாநகராட்சியின் சமூக முயற்சியினை ஒத்து இ-கெவர்னன்ஸ் இன்ஃப்ரராஸ்ட்ரக்சர் லிமிடெட் மற்றும் எஜுதர்மா அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளது.



இதுகுறித்து துவக்க விழாவில் பேசிய மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் கூறுகையில், இருபது லட்ச ரூபாய் அளவிலான இந்த கல்வி உபகராத் தொகையானது கோவையின் பல்வேறு கல்விப் பிரிவுகளைச் சேர்ந்த நூறு மாணவர்களுக்கு நேரடியாக பலனளிக்கும்.

நிறுவன மற்றும் கல்வித் துறைகளின் கல்விசார் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதே இந்த உதவித் தொகையின் இந்த உதவித்தொகையின் உத்தேசம் ஆகும். கல்வி உதவித் தொகை படிவங்களை சமர்ப்பித்தல், சரிபார்த்தல், நிதி விநியோகம் மற்றும் உதவித்தொகையினை புதுப்பித்தல் போன்ற அனைத்தும் கணினி வாயிலாக செயல்படுத்தப்படும். மாணவர்களுக்கான இந்த உதவித்தொகையால் அவர்களது வாழ்வாதாரமும், கல்வித் தரமும் மேம்படும் என்றார்.

இதைத்தொடர்ந்து பேசிய கே.வம்சிதர் ரெட்டி கூறுகையில், ஏசிசி மதுக்கரை சிமெண்ட் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு சிஎஸ்ஆர் ஊழியர்களுக்கான வாழ்வாதாரத்தை தரமாக மேம்படுத்தியுள்ளது. ஊழியர்களுக்கான பயிற்சியையும் சிறந்த முறையில் வழங்கி வருகிறது. 

பல நாடுகளில் அடிப்படை தெரிதல் கூட இன்றி பலர் கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபடுகின்றனர். எங்களது இத்திட்டத்தின் மூலம் அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு உதவித் தொகைகளும், அவர்களின் சுற்றுச்சூழலையும் மேம்படுத்தி வருகிறோம்.

இதன் முதற்கட்டமாக 20 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகை 100 மாணவர்களுக்கு வழங்கப்படும். அதாவது, இளங்களை பட்டப்படிப்பு மாணவர்கள் 40 பேருக்கும், ஐடிஐ மாணவர்கள் 20, டிப்ளமோ மாணவர்கள் 30, தொழில்நுட்பப் பிரிவு மாணவர்கள் 12 பேருக்கும் வழங்கப்படவுள்ளது என்றார்.

இதற்கான விண்ணப்பிக்கும் கல்வி நிறுவனமானது முதலில் தன்னை இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவிற்குப் பிறகு வித்யாசாரதி குழு உறுப்பினர்கள் பதிவு செய்துள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் சென்று மாணவர்கள் மத்தியில் இந்த உதவித் தொகையினைப் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தி கணினி வாயிலாக விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க உதவுவர்.

இதற்கான விண்ணப்பங்களை கணினி வாயிலாக 2017 ஜுன் 30-ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்ட பின் மாணவர்களுக்கான உதவித் தொகை செப்டம்பர் மாதம் வழங்கப்படும்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...