வ.உ.சி அடுத்து காந்திபுரம் பேருந்து நிலையத்தில் களமிறங்கிய ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள்


ஜல்லிக்கட்டு மீது விதிக்கப்பட்டுள்ள தடையினை நிரந்தரமாக நீக்க வேண்டும் என வலியுறுத்தி அமைதியான முறையில் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்களை இன்று காவல் துறையினர் திடீரென தாக்குதல் நடத்தி போராட்டத்தை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

காவல் துறையினரின் இந்த கொடூரமான தாக்குதலால் தமிழகம் முழுவதும் தற்போது போர்க்களமாக காட்சியளித்து வருகிறது.

கோவை வ.உ.சி மைதானத்தில் கடந்த ஒருவார காலமாக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்கள், இளைஞர்களை விரட்டும் முயற்சியில் இன்று காலை காவல்துறையினர் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.



இதனால், சிதறியோடிய இளைஞர்களும், மாணவர்களும் கோவையின் முக்கிய பேருந்து நிலையமான காந்திபுரம் பேருந்து நிலையத்தில் மீண்டும் தர்ணாவில் ஈடுபட்டனர்.



இதனைத்தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.









மேலும், தங்களுடைய அமைதியான போராட்டத்தை சீர்குலைத்து எங்கள் மீது கொடூரமான தாக்குதலை நடத்தும் காவல்துறையை கண்டிப்பதாக தெரிவித்த இளைஞர்கள் பேருந்துநிலையத்தில் இருந்த ஒரு பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.



இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கடுமையாக தாக்கியதில் தற்போது அந்த இளைஞர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்

இதனால்,காந்திபுரம் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...