கூட்டுறவு அமைச்சரின் பெயரை பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபடுவதாக கூறி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கூட்டுறவு அமைச்சரின் பெயரை பயன்படுத்தி உயரதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக கூறி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட கூட்டுறவு பண்டகசாலைகளில் பயோ மெட்ரிக் இயந்திரங்கள் வழங்கபட்டதாகவும் இதன் அடிப்படை விலை 3400 ரூபாய் எனவும் அதிக பட்ச விலையான 6000 சங்கங்கள் நிர்ணயித்து காசோலைகள் பெறபட்டதில் ஒன்றரை கோடி ரூபாய் வரை நிதி மோசடி நடந்துள்ளது என கூறினர்.

கூட்டுறவு சங்கங்கள் நவீன முகப்புடன் இருக்கும் நிலையில் நவீன மயமாக்குதல் என்ற பெயரில் நிதியை செயல்படுத்த உள்ளது கூட்டுறவுக்கு இழப்பு ஏற்படுத்தும் என்பதால் உடனடியாக இதனை கைவிட வேண்டும் என்றனர்.

நியாய விலைக் கடைகளில் உள்ள காலி சாக்குகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் 18 ரூபாய்க்கு விற்பனை செய்ய வாய்பிருந்தும் மாநில அலவில் துணை பதிவாளர் சரகம் வாயிலாக குழுக்கள் அமைக்கபட்டு 8 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 350 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதால் சங்கங்கள் மூலமே விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

மேலும், கணினி பராமரிப்பு என்ற பெயரில் துறை உத்தரவு இல்லாமல் தனியார் நிறுவனங்களுக்கு மாதம் 4000 ரூபாய் வரை மாதந்தோரம் கட்டாய வசூலில் ஈடுபட்டு வருகின்ற இந்த மோசடி நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு பணியாளர்கள் சுமார் 100-கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Newsletter

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாக செந்தில்பாலாஜி பதவியேற்பு

தமிழகத்தின் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற...

தொண்டாமுத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக எஸ்.பி.வேலுமணி பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் தொண்டாமுத்தூர் தொகுதியில் AIADMK சார்பில் வெற்றி பெற்ற எஸ்.பி.வேலுமணி சட்டப்...

கோயமுத்தூரில் அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தொடர் மழை வரத்தால் நீர் வெளியேற்றம்

கோயமுத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி மற்றும் திரு...

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...