கோவையில் மாணவர்களின் தடையை மீறி ரேக்ளா போட்டி துவக்கி வைத்த அமைச்சரின் கார் முற்றுகை

ஜல்லிக்கட்டிற்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று கோவையில் ரேக்ளா போட்டிக்கு மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக கொடிசியா மைதானத்தில் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 

இதற்கிடையே, தற்போது உள்ள அவசரச்சட்டம் வேண்டாம் எனவும் ஜல்லிக்கட்டு மீதான தடைகள் நிரந்தரமாக நீங்க வேண்டும் எனவும் இந்த போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், கொடிசியா வளாகத்தில் இன்று ரேக்ளா போட்டி துவங்கியது. இதனை அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்து, செய்தியாளர்களைச் சந்தித்த போது, இப்போராட்டத்திற்கு அவசரச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது அதிமுக-விற்கு கிடைத்த வெற்றி என உரையாற்றினார்.



இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜல்லிக்கட்டு மீதான தடைகள் அனைத்தும் நீங்கும் வரை ரேக்ளா, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகள் நடைபெறக் கூடாது எனவும் கூறிய இளைஞர்கள் தொடர்ந்து, அமைச்சரின் காரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனைத்தொடர்ந்து, கொடிசியா வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், இளைஞர்களுடன் கோவை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.





Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...