கோவையில் மாணவர்களின் தடையை மீறி ரேக்ளா போட்டி துவக்கி வைத்த அமைச்சரின் கார் முற்றுகை

ஜல்லிக்கட்டிற்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று கோவையில் ரேக்ளா போட்டிக்கு மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக கொடிசியா மைதானத்தில் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 

இதற்கிடையே, தற்போது உள்ள அவசரச்சட்டம் வேண்டாம் எனவும் ஜல்லிக்கட்டு மீதான தடைகள் நிரந்தரமாக நீங்க வேண்டும் எனவும் இந்த போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், கொடிசியா வளாகத்தில் இன்று ரேக்ளா போட்டி துவங்கியது. இதனை அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்து, செய்தியாளர்களைச் சந்தித்த போது, இப்போராட்டத்திற்கு அவசரச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது அதிமுக-விற்கு கிடைத்த வெற்றி என உரையாற்றினார்.



இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜல்லிக்கட்டு மீதான தடைகள் அனைத்தும் நீங்கும் வரை ரேக்ளா, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகள் நடைபெறக் கூடாது எனவும் கூறிய இளைஞர்கள் தொடர்ந்து, அமைச்சரின் காரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனைத்தொடர்ந்து, கொடிசியா வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், இளைஞர்களுடன் கோவை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.





Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...