குரூப் 4 தேர்வு- கோவைக்கு வந்த வினாத்தாள்கள்


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 4 தேர்வு வரும் 6ம் தேதியன்று (ஞாயிறு) தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. இத்தேர்வை எழுத தமிழகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர்.

கோவை மாவட்டதில் குரூப் 4 தேர்வை எழுத சுமார் 2500-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான வினாத்தாள்கள் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் இருந்து வாகனம் மூலம் புதனன்று (இன்று) கோவைக்கு கொண்டுவரப்பட்டது. 

மொத்தம் 530 பண்டில்களாக அரசு முத்திரையுடன் சீல் செய்யப்பட்டு பலத்த பாதுகாப்புடன் கோவை மாவட்ட கருவூல அலுவலகத்தில் வைக்கப்பட்டள்ளது.

Newsletter