அவினாசிலிங்கம் பல்கலை சார்பில் மூலதனத்தின் பங்கு குறித்த முன்னோக்கிய பாதை கருத்தரங்கம்

உலக அரங்கில் பொருளாதார தரத்தை முன்னேற்றுவதற்கான உத்திகள் என்னும் நோக்கத்தின் அடிப்படையில் முதலீடு, கட்டமைப்பு வசதிகள் மற்றும் அறிவுசார் மூலதனத்தின் பங்கு குறித்த முன்னோக்கிய பாதை கருத்தரங்கம் கோவை அவினாசிலிங்கம் பல்கலையின் சார்பில் நடைபெற உள்ளது.



அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவன வளாகத்தில் மேலாண்மைத் துறையினர் சார்பில் வருகின்ற டிசம்பர் 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்த ஏழாவது சர்வதேச பன்னாட்டு கருத்தரங்கமானது உலக அரங்கில் பொருளாதார தரத்தை முன்னேற்றுவதற்கான உத்திகள் என்னும் நோக்கத்தின் அடிப்படையில் முதலீடு, கட்டமைப்பு வசதிகள் மற்றும் அறிவுசார் மூலதனத்தின் பங்கு குறித்த முன்னோக்கிய பாதை என்னும் தலைப்பில் நடைபெற உள்ளது. 

சர்வதேச பன்னாட்டுக் கருத்தரங்கத்தை தான்சானியா நிதித்துறை மேலாண்மை நிறுவனம் மற்றும் சென்னை தொழில் வர்த்தக சங்கத் தொழிற்துறையினரும், அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவன மேலாண்மைத் துறையும் ஒருங்கிணைந்து இந்த சர்வதேச பன்னாட்டுக் கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சர்வதேச பன்னாட்டுக் கருத்தரங்கானது மூன்று குழு விவாதங்கள் மற்றும் சிறப்புரைகள் கொண்டது. இக்குழு விவாதங்கள் கருத்தரங்கின் தலைப்பின் மூன்று பகுதிகளான முதலீட்டு சூழல், எதிர்காலத் தொழில்நுட்பத்தின் சிறந்த நகரங்கள் மற்றும் அதன் சவால்கள், அறிவுசார்ந்த மூலதனம் ஆகியவகைகளின் சிறந்த பங்களிப்பின் மூலம் ஒரு நாட்டின் எதிர்காலத்தில் மேம்பாடு அடைவதற்கான வித்துக்களை விதைக்கும் விதத்தில் அமையவிருக்கிறது.

சர்வதேச பன்னாட்டு கருத்தரங்கத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து தொழில் முனைவோர்கள், தொழில் மற்றும் வர்த்தகத் துறையை சார்ந்தவர்கள், கல்வியாளர்கள், அரசு அதிகாரிகள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் ஆய்வாலர்கள் கலந்து கொள்கின்றனர்.

இக்கருத்தரங்கத்தினை அவினாசிலிங்கம் பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் பி.ஆர்.கிருஷ்ணகுமார் துவக்கி வைத்து தலைமையுரை ஆற்ற உள்ளார். மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபாகர் பிரபு துவக்கவுரை ஆற்றவுள்ளார். தான்சானிய நாட்டு துணை தூதரக ஆணையர் முகமது எச். முகமது சிறப்புரை வழங்க உள்ளார். பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் பிரேமாவதி விஜயன் வாழ்த்துரை வழங்க உள்ளார்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...