கே.எம்.சி.எச் மருத்துவமனை சார்பில் பெண் காவல்துறையினருக்கு இலவச மருத்துவ முகாம்

கே.எம்.சி.எச் மருத்துவமனை சார்பில் பெண்களுக்கான மார்பகம் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் இலவச விழிப்புணர்வு முகாம் கோவை காவலர் பயிற்சிப் பள்ளி அரங்கத்தில் இன்று நடைபெற்றது. முகாமினை கோவை மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் துவங்கி வைத்தார். 


பின்னர், அவர் பேசுகையில்:-
பெண்கள் பலர் தங்களது உடல் ஆரோக்கியத்தை பற்றி கண்டுகொள்வதில்லை. மருத்துவர்களின் ஆலோசனைப்படி நடப்பதன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் மார்பகம் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் பாதிப்பு வராமல் தடுக்க முடியும். இன்றைய தொழில்நுட்பத்தின் மூலம் 100 சதவீதம் வரை பல்வேறு வகையான புற்றுநோய்களை குணப்படுத்த முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், கிராமப்புறத்தில் உள்ள பெண்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கே.எம்.சி.எச் மருத்துவமனை நடத்துகிறது. 



இன்று கே.எம்.சி.எச் மருத்துவமனை நடத்தும் இம்முகாமில் கோவை காவலர் பயிற்சிப் பள்ளியில் உள்ள பெண் காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் அதுமட்டுமல்லாமல், இந்த விழிப்புணர்வு பற்றி உங்களுக்கு தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்கவேண்டும் எனக் கூறினார்.  

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...