குடியிருப்பு பகுதியில் தொழிற்சாலை- கல்வி பாதிப்பதாக பள்ளி மாணவிகள் மனு

குடியிருப்பு பகுதியில் தொழிற்சாலை நடத்தி அப்பகுதியில் செயல்படும் பள்ளியில் கல்வி பாதிப்பதாகவும், மேலும் அந்தப் பகுதியில் இருந்து வெளியேறச்சொல்லி மிரட்டி வருவதாகவும் பள்ளி மாணவிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை சுகுணா பெப்ஸ் பள்ளியில் 12ம் வகுப்பு பயிலும் தன்யா, ஜிடி மெட்ரிக் பள்ளியில் 10ம் வகுப்பு பயிலும் நிவேதா ஆகிய பள்ளி மாணவிகள் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிறுப்பதாவது:-

''ஏ.செல்வி, தன்யா, நிவேதா ஆகிய நாங்கள் உப்பிலிபாளையம் அருகே உள்ள ஸ்ரீனிவாசா நகர், ஹரி ராம் வீதியில் வசித்து வருகிறோம். எங்களுடைய வாழ்க்கையை தீர்மானிக்கப் போவது இந்த வருட படிப்பு என்பது அனைவரும் அறிந்ததே. இந்த சூழ்நிலையில் எங்களுடைய வீட்டை ஒட்டி அமைந்திருக்கும் கன்னியப்பன் என்பவர் அவருடைய நிலத்தை அரசன் இண்டஸ்ட்ரீஸ் நடத்தி வரும் அரசகுமாரன் என்பவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வாடகைக்கு விட்டார்.

மேற்படி தொழிற்சாலை வந்த பிறகு எங்களது நிம்மதி முற்றிலும் தொலைந்து விட்டது. கால நேரம் இல்லாமல் இரவு நேரங்களிலும் மேற்படி நபர்கள் வேலை செய்கின்றனர். அந்த தொழிற்சாலையில் இருந்து 110 டெசிபலுக்கும் மேலாக ஒலி ஏற்பட்டு எங்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமலும், இரவு நேரங்களில் உறங்க முடியாமலும் அவதிப்பட்டு வருகிறோம். எனது தந்தை பாலசுப்பிரமணியன் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்து வருவதால் காலை 7 மணிக்கு புறப்பட்டு இரவு 10 மணியளவில் தான் வீடு திரும்புவார். வேறு ஆண்கள் யாரும் எங்களது குடும்பத்தில் இல்லாததால் நாங்கள் மேற்படி நபர்களை அணுகி இரவு நேரங்களிலும், அதிகாலை நேரங்களிலும் வேலை செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டோம். ஆனால், அந்த இடத்தின் உரிமையாளர்களும், அவர்களது உறவினர்களும் எங்களது வீட்டினை காலி செய்துவிடுமாறு மிரட்டி வருகின்றனர். மேலும், இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடமும் புகார் அளித்து எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

உனடடியாக மாவட்ட நிர்வாகம் இதில் கவனம் செலுத்தி மேற்படி நிறுவனங்களை நடத்தி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கூறியுள்ளனர்.

Newsletter

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...

குமரகுரு கல்வி நிறுவனங்களில் 1,675 மாணவர்களுக்கு ₹1.6 கோடி மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப்

குமரகுரு கல்வி நிறுவனங்களில் இன்று மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப் விழா நடைபெற்றது. கல்வி, விளையாட்டு மற்றும் NCC ஆகிய...

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...