பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பினர் வலியுறுத்தலின் பேரில் இன்று சோதனை ஓட்டம் நடத்தப்படவுள்ளது. வரும் 29ம் தேதி தேரோட்ட விழா திட்டமிடப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழாவின் ஒரு பகுதியாக வரும் 29ம் தேதி நடைபெற உள்ள தேரோட்ட விழாவை முன்னிட்டு, தேரின் உறுதித்தன்மையை கண்டறிய இன்று சோதனை ஓட்டம் நடத்தப்படவுள்ளது.






கடந்த 23ம் தேதி துவங்கிய இந்தாண்டு பங்குனி உத்திர தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 29ம் தேதி தேரோட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தேரை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் தேரின் உறுதித்தன்மையில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து நிலைத்தன்மை சான்றிதழ் வழங்க மறுத்தனர்.




இதனால், சப்பரத்தில் சுவாமி திருவீதியுலா நடத்த அறநிலையத்துறை அதிகாரிகள் திட்டமிட்டனர். இதற்கு ஹிந்து அமைப்பினர் மற்றும் பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீண்டும் ஆய்வு நடத்தினர்.




பொதுப்பணித்துறையினர் சுட்டிக்காட்டிய குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டன. நேற்று இரவு பொதுப்பணித்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு செயற்பொறியாளர் செல்வராஜ் தலைமையிலான குழுவினர் மீண்டும் ஆய்வு செய்தனர். இன்று காலை மீண்டும் ஆய்வு செய்து இறுதி முடிவை தெரிவிப்பதாக அவர்கள் கூறினர்.




அப்போது அங்கிருந்த ஹிந்து அமைப்பினர் பொதுப்பணித்துறை அதிகாரியின் வாகனத்தை முற்றுகையிட்டனர். "தேரோட்டம் நிச்சயம் நடக்க வேண்டும். தேரின் உறுதித்தன்மையை கண்டறிய இன்று சோதனை ஓட்டம் நடத்த வேண்டும். அதன்மூலம் தேர் உறுதியாக உள்ளதா என்பது தெரியும்" என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.




இதையடுத்து, தேரின் உறுதித்தன்மையை கண்டறிய இன்று சோதனை ஓட்டம் நடத்தப்படும் என அறநிலையத்துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். சோதனை ஓட்டத்தின் முடிவுகளை அடுத்து தேரோட்ட விழா நடத்துவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

Newsletter

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...

குமரகுரு கல்வி நிறுவனங்களில் 1,675 மாணவர்களுக்கு ₹1.6 கோடி மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப்

குமரகுரு கல்வி நிறுவனங்களில் இன்று மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப் விழா நடைபெற்றது. கல்வி, விளையாட்டு மற்றும் NCC ஆகிய...

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...