கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Coimbatore:

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து, ஈச்சனாரியில் அக்கட்சி தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது, தொண்டர் ஒருவர் திடீரென தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு வழங்கப்படாததால் தெற்கு மாவட்ட பாஜகவினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மறுபரிசீலனை செய்து தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த தொகுதியில் பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் வசந்தராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், அந்த தொகுதி அதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த முறை 27 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், முந்தைய தேர்தலில் போட்டியிட்ட சில தொகுதிகளை மட்டுமே மீண்டும் பெற்றுள்ளது.

மேலும், கடந்த முறை வெற்றி பெற்ற சில முக்கிய தொகுதிகளில் இம்முறை பாஜக போட்டியிடாததும் கட்சியினரிடையே பேசுபொருளாகியுள்ளது.

இந்த நிலையில், கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்க கோரி தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஈச்சனாரியில் நடைபெற்ற போராட்டத்தின் போது தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

மடத்துக்குளம் தொகுதிக்கு அமமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சண்முகவேலு அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் அமைச்சரும் மேற்கு ம...

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...