கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் வசந்தராஜனுக்கு சீட் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் தெற்கு மாவட்ட பாஜகவினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.


Coimbatore: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தெற்கு மாவட்ட பாஜக தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மறுபரிசீலனை செய்து பாஜகவுக்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், திடீரென ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.




பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் வசந்தராஜனுக்கு கிணத்துக்கடவு தொகுதியில் சீட் வழங்கப்படும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இந்த தொகுதி அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் தெற்கு மாவட்ட பாஜகவினர் கடும் அதிருப்தி அடைந்தனர். தொகுதி ஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை வைத்து வருகின்றனர்.




2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், நெல்லையில் நயினார் நாகேந்திரன், நாகர்கோவிலில் M.R. Gandhi, மொடக்குறிச்சியில் C. Saraswathi, கோவை தெற்கில் Vanathi Srinivasan ஆகிய 4 பேர் வெற்றி பெற்றனர். இந்த முறை பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.




அதிமுக கூட்டணியில் பாஜக மயிலாப்பூர், தளி, மொடக்குறிச்சி, உதகமண்டலம், அவினாசி, திருப்பூர் தெற்கு, கோவை வடக்கு, கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், மதுரை தெற்கு, சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர், ராதாபுரம், நாகர்கோவில், விளவங்கோடு, ஆவடி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், அறந்தாங்கி, மானாமதுரை, ராமநாதபுரம், குளச்சல், பத்மநாபபுரம், ராசிபுரம் ஆகிய தொகுதிகளில் களமிறங்குகிறது.




இவற்றில், பாஜக 2021-ல் போட்டியிட்ட மொடக்குறிச்சி, நாகர்கோவில், குளச்சல், ராமநாதபுரம், தளி, திருவண்ணாமலை, உதகமண்டலம், விளவங்கோடு ஆகிய 7 தொகுதிகளை மட்டுமே மீண்டும் பெற்றுள்ளது. பாஜகவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்த முறை வென்ற நெல்லை மற்றும் Vanathi Srinivasan வெற்றி பெற்ற கோவை தெற்கு ஆகிய தொகுதிகளில் இம்முறை அக்கட்சி போட்டியிடவில்லை.




பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முதல்முறையாக சாத்தூர் தொகுதியில் போட்டியிடுவார் என கூறப்படுகிறது. கடந்த முறை கோவை தெற்கில் வென்ற Vanathi Srinivasan இந்த முறை கோவை வடக்கில் களமிறங்க உள்ளார். மயிலாப்பூர் தொகுதியில் Tamilisai Soundararajan களமிறங்க உள்ளதாகத் தெரிகிறது. அவினாசி தொகுதியில் மத்திய இணை அமைச்சர் L. Murugan போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.




கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்க வலியுறுத்தி ஈச்சனாரியில் அக்கட்சி தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வரும் நிலையில், திடீரென ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பக்கத்தில் இருந்தவர்கள் தடுத்து நிறுத்தியதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

Newsletter

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (02.09.2026) மின்தடை

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 2ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...