பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க மாநகராட்சி ''மை ஷாப்பிங் மை பேக்'' திட்டம் அறிமுகம்.


கோவை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் ''மை ஷாப்பிங் மை பேக்' என்ற புதிய அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் முழுக் குறிக்கோள் பொதுமக்களிடம் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைக் குறைத்து அதுகுறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே ஆகும்.

கோவை மாநகராட்சி, சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர் அமைப்புகள் ஆகியோர் இணைந்து துவங்கப்பட்டுள்ள இந்த அமைப்பு மக்களிடம் பிளாஸ்டிக் பைகள் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகிறது. மேலும், எவ்வாறு பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கலாம் என்பதை விவாதிக்கும் வகையில் ஒரு வாட்ஸ்அப் குழுவும் துவங்கப்பட்டுள்ளது. 

மை ஷாப்பிங் மை பேக் அமைப்பின் எல்.டிம்பில் தலைமையில் துவங்கப்பட்டுள்ள இந்த வாட்ஸ்அப் குழுவில் பிளாஸ்டிக் பயன்பாட்டினை கட்டுப்படுத்துவது, அதனால் ஏற்படும் நன்மைகள், நோக்கம் உள்ளிட்டவை விவாதிக்கப்படும். 



இதுகுறித்து சித்ரா ரவீந்திரன் கூறுகையில், பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைக் குறைக்க முதற்கட்டமாக வணிக நிறுவன உரிமையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் வீட்டில் இருந்தே பைகளை எடுத்து வர உரிமையாளர்கள் வலியுறுத்த வேண்டும். இதற்கு அனைத்து நிறுவன உரிமையாளர்களும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றார்.

பி.கவிதா கூறுகையில், குடியிருப்பு பகுதியில் உள்ள தையலகக் கடைக்காரர்கள் இதற்கு ஆதரவளிக்க வேண்டும். பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணியினால் பைகளை செய்து விநியோகிக்க வேண்டும் என்றார்.

பிளாஸ்டிக் பயன்பாட்டினை ஒழிக்கும் இத்திட்டத்திற்கு கிருஷ்ணா கல்லூரி மாணவர்களும் தங்களது ஆதரவினைத் தெரிவித்துள்ளனர். அக்கல்லூரி மாணவர்களே துணியினால் தயாரிக்கப்பட்ட பையினை கடைகளுக்கு விநியோகித்து வருகின்றனர்.

மை ஷாப்பிங் மை பேக் அமைப்பின் சார்பில் அனைத்து வணிக வளாகங்களிலும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இதனை பின்தொடரும் வணிக நிறுவனம் குறித்து புள்ளிவிவரம் சேகரிக்கவும் அதனை மாநகராட்சியிடம் ஒப்படைக்கவும் திட்டமிட்டுள்ளது. அதன்படி வரும் நவம்பர் 10ம் தேதிக்குள் குறைந்தளவு நூறு நிறுவனத்திலாவது பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை முற்றிலும் தவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மேலும், கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட கோவை வடக்கு, தெற்கு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் தன்னார்வலர் அமைப்பிலிருந்து மொத்தம் 10 பேர் கொண்ட குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மை ஷாப்பிங் மை பேக் அமைப்புடன் இணைந்து ஒவ்வொரு பகுதியிலும் இதுகுறித்தான விழிப்புணர்வில் ஈடுபடுவர். இதுகுறித்து மேலும் தகவலுக்கு 94433 44731 என்ற தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...

கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல்: கோடை வெயிலால் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு

கோவையில் வெயில் மிகுதியாக உள்ளதால் உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்த...

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தடை: அண்ணாமலை கண்டனம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவுக்கு பொதுப்பணித்துறை தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து...

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...