கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர்ஸை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் பாப்பநாயக்கன்புதூரை சேர்ந்த ஐடி ஊழியர் ஹரீஸிடம் பர்ஸை ஒப்படைத்து மாணவிக்கு பாராட்டு தெரிவித்தனர்.


Coimbatore: கோவையில் சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை எடுத்து உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது பள்ளி மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மாணவியின் நேர்மையான செயலுக்கு போலீசார் பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவித்துள்ளனர்.




கோவை தாமஸ் வீதியை சேர்ந்தவர் மணீஷ் (45). இவரது மகள் ஜான்வி (9) புலியகுளத்தில் உள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார்.




நேற்று மார்ச் 23ம் தேதி மதியம் மணீஷ் தனது மகள் ஜான்வியுடன் வீட்டில் இருந்து கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவர்கள் தேர்வீதி அருகே சென்றபோது, சாலையில் ஒரு மணி பர்ஸ் கிடந்ததை மாணவி ஜான்வி கண்டெடுத்தார்.




ஜான்வி அந்த பர்ஸை திறந்து பார்த்தபோது, உள்ளே ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம் ஆகியவை இருந்தன. உடனே ஜான்வி தனது தந்தையுடன் கடை வீதி காவல் நிலையத்திற்கு சென்று கீழே கண்டெடுத்த பணம் அடங்கிய பர்ஸை இன்ஸ்பெக்டர் சங்கரிடம் ஒப்படைத்தார்.




பின்னர் போலீசார், மணி பர்ஸில் இருந்த ஆதார் அட்டையில் உள்ள முகவரியை வைத்து மணி பர்ஸை தவறவிட்ட நபரை கண்டறிந்தனர். அவர் பாப்பநாயக்கன்புதூரை சேர்ந்த ஐடி ஊழியர் ஹரீஸ் (33) என்பது தெரியவந்தது. போலீசார் நேற்று அவரை காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர்.




காவல் நிலையத்தில் மாணவி ஜான்வி மணி பர்ஸை அதன் உரியவர் ஹரீஸிடம் நேரடியாக ஒப்படைத்தார். மாணவியின் இந்த நேர்மையான செயலைப் பாராட்டி இன்ஸ்பெக்டர் சங்கர் ஜான்விக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். தனது பணத்தையும் முக்கியமான ஆவணங்களையும் மீட்டெடுத்த ஹரீஸ் மாணவிக்கு நன்றி தெரிவித்தார்.




இளம் வயதிலேயே நேர்மையையும் பொறுப்புணர்வையும் வெளிப்படுத்திய ஜான்வியின் செயல் பலரின் பாராட்டைப் பெற்று வருகிறது. இது போன்ற நேர்மையான செயல்கள் சமுதாயத்தில் மற்றவர்களுக்கும் முன்மாதிரியாக அமையும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...