ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழகம் "Institutional Excellence" விருதை வழங்கி கௌரவித்தது. மாணவர்களின் புதுமைத்திறன் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை அங்கீகரித்து வழங்கப்பட்ட விருதை முனைவர் பி.எல்.சிவக்குமார் பெற்றுக்கொண்டார்.


Coimbatore: எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு குஜராத்தின் சூரத்திலுள்ள ஆரோ பல்கலைக்கழகம் "Institutional Excellence" விருதை வழங்கி கௌரவித்துள்ளது. மார்ச் 24 ஆம் தேதி நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில் இந்த விருது வழங்கப்பட்டது.




ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் சர்வதேச மற்றும் தேசிய அளவில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் நடைபெறும் ஹேக்கத்தான் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று சாதனைகள் படைத்து வருகின்றனர். அண்மையில் சென்னை தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற Smart India Hackathon போட்டியில் பொறியியல் கல்லூரிகளுடன் போட்டியிட்டு முதல் பரிசை வென்று சாதனை படைத்துள்ளனர். இப்போட்டியில் பங்கேற்ற அணிகளுள் கலை அறிவியல் கல்லூரி அணி இது ஒன்று மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.




அதேபோன்று, சர்வதேச அளவில் இஸ்ரேல் Ariel பல்கலைக்கழகம் நடத்திய Israel Hackathon போட்டியில் இந்தியா சார்பில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி பங்கேற்று வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. பொறியியல் மாணவர்களுக்கு இணையாக தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கி வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் கல்வியாளர்கள் மத்தியில் தனி கவனம் பெற்று வருகின்றனர்.




வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்திற்கேற்ப செயற்கை நுண் णறிவு, Machine Learning மற்றும் Cyber பாதுகாப்பு போன்ற துறைகளில் புதுமையான தீர்வுகளை மாணவர்கள் வழங்கி வருகின்றனர். புதுமைத்திறன், தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் நடைமுறை சிக்கலைத் தீர்க்கும் திறன் ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டது.




IBM நிறுவன தொழில்நுட்ப நிபுணர் ஆய்வகம், நாட்டின் மேலாளர் Jagadisha Bhat அவர்கள் "Institutional Excellence" விருதினை வழங்க, கல்லூரியின் சார்பில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் Dr B.L. Sivakumar பெற்றுக்கொண்டார்.




"Institutional Excellence" விருதினைப் பெற்று தந்த கல்லூரியின் மாணவர்களுக்கும், உறுதுணையாக இருந்த கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்களுக்கும் எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் Dr Sundar Ramakrishnan பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

Newsletter

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...