வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள கோவை மாவட்டம் தயார்- ஆட்சியர்

வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கடந்த செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 7ம் தேதி கோவை மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்பு மற்றும மீட்புப் பணிகள் துறை, பொதுசுகாதாரத்துறை, கால்நடை உள்ளிட்ட பல துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டார்.

இதில், கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக ஏற்படும் வெள்ளப்பெருக்கின் போது 31 இடங்கள் பாதிப்புக்குள்ளாகக் கூடிய இடங்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த இடங்களில் மண்டலக்குழு, முன்னெச்சறிக்கை குழு, தேடுதல் மற்றும் மீட்புக் குழு, வெளியேற்றும் குழு, நிவாரண முகாம் குழு உள்ளிட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் 1077 என்ற அழைபேசி வசதியுடன் அவசரப் பணி மையம் அமைக்கப்பட்டுள்ளது. 

கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவக்காற்று மழையினால் வெள்ள பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டால் பொதுமக்கள், கால்நடைகள் மற்றும் சொத்துக்களை பாதுகாக்கும் வகையில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...

குமரகுரு கல்வி நிறுவனங்களில் 1,675 மாணவர்களுக்கு ₹1.6 கோடி மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப்

குமரகுரு கல்வி நிறுவனங்களில் இன்று மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப் விழா நடைபெற்றது. கல்வி, விளையாட்டு மற்றும் NCC ஆகிய...

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...