2.4 கிலோ கஞ்சா பறிமுதல்!


புளியம்பட்டியிலிருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்த முயன்ற கேரளாவை சேர்ந்த இருவரை கோவை காரமடை வனத்துறையினர் பிடித்து போதை பொருள் தடுப்பு நுன்னறிவு பிரிவு போலிஸிடம் ஒப்படைத்தனர். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட இருவரும் கோவை மத்திய சிறையில் இன்று அடைக்கப்பட்டனர்.



கோவை காரமடை வனப்பகுதியில் நேற்று மதியம் வனத்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது கேரளா பதிவு எண் கொண்ட பொலேரோ வாகனத்தை சோதனை செய்தனர். அதில் 2.4 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக விசாரணை மேற்கொண்ட வனத்துறையினர். போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.



மேலும் அவர்களிடம் போதை பொருள் தடுப்பு பிரிவு நுன்னறிவு காவல் ஆய்வாளர் ஜெயக்குமார் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் இருவரும் கேரளாவை சேர்ந்தவர்கள் என்றும் காரின் உரிமையாளர் சதீஷ் குமார் என்றும்,மற்றொருவர்கள் ரமேஷ் குமார் என்பதும் தெரிய வந்த்து. மேலும் ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியில் இருந்து கேரளா மாநிலம் பாலக்காடுக்கு எடுத்துசென்றதும் தெரிய வந்தது, இதை அடுத்து கார் மற்றும் கஞ்சா உள்ளிட்ட பொருட்களை பரிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும் இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...

குமரகுரு கல்வி நிறுவனங்களில் 1,675 மாணவர்களுக்கு ₹1.6 கோடி மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப்

குமரகுரு கல்வி நிறுவனங்களில் இன்று மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப் விழா நடைபெற்றது. கல்வி, விளையாட்டு மற்றும் NCC ஆகிய...

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....