அமெரிக்க புற்றுநோயியல் நிலையத்துடன் இணைந்த கோவை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி

கோவை மாநகரில் அனைத்து உடல்நல சிகிச்சை தேவைகளுக்கும் ஒரே புகழிடமாகத் திகழும் ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, ஹைதராபாத்தைச் சார்ந்த அமெரிக்கன் ஆன்காலஜி இன்ஸ்டியூட் உடன் இணைந்துள்ளது. இந்த கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக விரிவான புற்றுநோய் சிகிச்சை பிரிவு 2017ம் ஆண்டு ஜூலையில் முழுமையாக இயங்கச் செய்வதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் இக்குழுமங்கள் அறிவித்துள்ளன.

இதுகுறித்து அமெரிக்க ஆன்காலஜி இன்ஷ்டியூட், செயல் இயக்குநரும் மற்றும் கூட்டு நிறுவனருமான ஜோசப் ஏ.நிக்கோலஸ் கூறியதாவது:- 

அமெரிக்கன் ஆன்காலஜி இன்ஸ்டியூட் என்பது மேற்கத்திய தரக்கட்டுப்பாடுகளை சார்ந்து முழுமையான உயர்தரம் வாய்ந்த புற்றுநோய் சிகிச்சை வழங்கும் நிறுவனமாகும். இதன் முதல் மையத்தை தமிழகத்தில் கோவை மாவட்ட ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பெறுவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்'' என்றார்.

ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிறுவனத் தலைவரும், நரம்பு மற்றும் தண்டுவட அறுவைசிகிச்சை மருத்துவ ஆலோசகருமான டாக்டர் கே.மாதேஸ்வரன் கூறியதாவது:- 

''சமூக ஊடகம் மற்றும் இணையதள வசதி எளிதாக கிடைக்கும் நிலையில் மக்கள் இப்போது உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை தவிர வேறு எதுவும் வேண்டாம் என்று விரும்புகிறார்கள். எங்களுடைய விரிவான புற்றுநோய் சிகிச்சை பிரிவு, அமெரிக்க புற்றுநோயியல் நிலையத்துடன் இணைந்து எங்களுடைய சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் உலகிலுள்ள தலைசிறந்த புற்றுநோய் மருத்துவ வல்லுநர்களைக் கொண்டு மருத்துவ நடவடிக்கைகளை தொடங்கவுள்ளது'' என்றார்.

ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிறுவன தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் ஆலோசனையில் உருவான இத்திட்டம், இக்குழுமத்தை அங்கம் வகிக்கும் பிரசிதிபெற்ற மருத்துவ புற்றுநோயியல் வல்லுநர் டாக்டர் சுதாகர் நடராஜன் மற்றும் அமெரிக்க ஆன்காலஜி இன்ஷ்டியூட் மருத்துவ புற்றுநோயியல் இயக்குநர் தலைமையில் சிகிச்சை ரீதியாக நடத்தப்படும்.

Newsletter

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 26 நிலவரம்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி, திருமூர்த்தி அணைகளில் மார்ச் 26ஆம்...

நீலகிரி மலை ரயிலில் பயணிக்க ஜெர்மன் ரயில் ஆர்வலர்கள் ரூ.3 லட்சம் வாடகை செலுத்தினர்

ஜெர்மனியைச் சேர்ந்த ரயில் ஆர்வலர்கள் குழு UNESCO அங்கீகாரம் பெற்ற நீலகிரி மலை ரயிலை ரூ.3 லட்சம் வாடகைக்கு எடுத்து குன்னூ...

தொழிலாளியை தாக்கி ஜாதி அவமதிப்பு: இருவருக்கு ஆயுள் தண்டனை

Coimbatore மலையாண்டிபட்டினம் பகுதியில் தேங்காய் உரிக்கும் தொழிலாளி பட்டீஸ்வரனை இரும்புக் கம்பியால் தாக்கி ஜாதி அவமதிப்பு...

கோவையில் 594 ரவுடிகளிடம் நல்லொழுக்க பிணை: தேர்தல் அமைதிக்கு போலீசார் தீவிர நடவடிக்கை

தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாநகர் மற்றும் மாவட்ட போலீசார் 594 ரவுடிகளிட...

கோவையில் 22 கிலோ கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டு சிறை

கோவை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் 22 கிலோ கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித...