கோவை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் 22 கிலோ கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தது. 2019-ல் பாரத ஸ்டேட் வங்கி சாலையில் கைதான வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயக்குமாருக்கு நீதிபதி ராஜலிங்கம் தீர்ப்பளித்தார்.
Coimbatore: கோவை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் 22 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் குற்றவாளிக்கு 12 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.
2019 ஆகஸ்ட் 6-ம் தேதி, கோவை மாநகர் பாரத ஸ்டேட் வங்கி சாலையில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சாந்தி திரையரங்கம் பேருந்து நிறுத்தம் அருகே கோவை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளர் சலேத் மேரி தலைமையில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையின்போது, இரண்டு பெரிய பைகளுடன் வந்த ஒரு நபரை போலீசார் சந்தேகத்தின் பேரில் தடுத்து விசாரித்தனர். பைகளை சோதனையிட்டபோது அதில் 22 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அந்த நபர் வேலூர் மாவட்டம், ஆம்பூர் சானாங்குப்பம் மந்தக்கரை வீதியைச் சேர்ந்த ஜெயக்குமார் (43) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு கோவை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
விசாரணை நடைமுறைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், நீதிபதி ராஜலிங்கம் மார்ச் 26-ம் தேதி தீர்ப்பை வெளியிட்டார். குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயக்குமாருக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.ஒரு லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு சார்பில் சிறப்பு வழக்குரைஞர் வெ.சிவகுமார் ஆஜரானார்.
இந்த தீர்ப்பு கோவையில் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கையின் அடையாளமாக விளங்குகிறது.
2019 ஆகஸ்ட் 6-ம் தேதி, கோவை மாநகர் பாரத ஸ்டேட் வங்கி சாலையில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சாந்தி திரையரங்கம் பேருந்து நிறுத்தம் அருகே கோவை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளர் சலேத் மேரி தலைமையில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையின்போது, இரண்டு பெரிய பைகளுடன் வந்த ஒரு நபரை போலீசார் சந்தேகத்தின் பேரில் தடுத்து விசாரித்தனர். பைகளை சோதனையிட்டபோது அதில் 22 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அந்த நபர் வேலூர் மாவட்டம், ஆம்பூர் சானாங்குப்பம் மந்தக்கரை வீதியைச் சேர்ந்த ஜெயக்குமார் (43) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு கோவை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
விசாரணை நடைமுறைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், நீதிபதி ராஜலிங்கம் மார்ச் 26-ம் தேதி தீர்ப்பை வெளியிட்டார். குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயக்குமாருக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.ஒரு லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு சார்பில் சிறப்பு வழக்குரைஞர் வெ.சிவகுமார் ஆஜரானார்.
இந்த தீர்ப்பு கோவையில் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கையின் அடையாளமாக விளங்குகிறது.