கோவையில் 594 ரவுடிகளிடம் நல்லொழுக்க பிணை: தேர்தல் அமைதிக்கு போலீசார் தீவிர நடவடிக்கை

தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாநகர் மற்றும் மாவட்ட போலீசார் 594 ரவுடிகளிடம் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 110ன் கீழ் நல்லொழுக்க பிணை பத்திர உறுதிமொழி பெற்று அமைதியான தேர்தல் சூழலை உறுதி செய்ய தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Coimbatore: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுவதற்கும் அமைதியான தேர்தல் சூழலை உறுதி செய்வதற்கும் கோவை மாநகர் மற்றும் மாவட்ட போலீசார் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி கோவை மாநகர் முழுவதும் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பழங்குற்றவாளிகள் மற்றும் முந்தைய குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது சிறப்பு சோதனைகள் நடத்தப்பட்டன.

இந்த நடவடிக்கையின் போது, 594 ரவுடிகளிடம் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபடாமல் இருக்க குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 110ன் கீழ் நல்லொழுக்க பிணை பத்திர உறுதிமொழி பெறப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

போலீசார் மேலும் கூறியதாவது: "தேர்தல் காலத்தில் எந்தவிதமான சட்ட ஒழுங்கு பிரச்சினைகளும் ஏற்படாதவாறு இருக்க தொடர்ந்து கண்காணிப்பு பணி மற்றும் தீவிர ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது."

"இதன் ஒரு பகுதியாக 594 ரவுடிகளிடம் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபடாமல் இருக்க நல்லொழுக்க பிணை பத்திர உறுதிமொழி பெறப்பட்டுள்ளது. அவர்கள் ஏதாவது தவறு செய்து கைது செய்யப்பட்டால் பிணை பத்திர காலம் முடியும் வரை சிறையில் இருந்து வெளியே வர முடியாது" என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

தேர்தல் நடைமுறைகள் சீராக நடைபெற கோவை மாநகர் மற்றும் மாவட்ட போலீசார் இந்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

Newsletter

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (02.09.2026) மின்தடை

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 2ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...