கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 26 நிலவரம்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி, திருமூர்த்தி அணைகளில் மார்ச் 26ஆம் தேதி நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் நீர் வரத்து விவரங்கள் நீர்வளத்துறை அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ளன. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்து தொடர்கிறது.


Coimbatore: கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் அமைந்துள்ள முக்கிய அணைகளில் மார்ச் 26ஆம் தேதி நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் நீர் வரத்து விவரங்களை நீர்வளத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.



ஆழியாறு அணை நிலவரம்:


ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்ட முக்கிய நீர்த்தேக்கமாகும். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மார்ச் 26ஆம் தேதி நிலவரப்படி 65.15 அடியாக நீர்மட்டம் பதிவாகியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 356 கன அடி நீர்வரத்து இருக்கும் நிலையில், அணையில் இருந்து 243 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.



பரம்பிக்குளம் அணை நிலவரம்:


பொள்ளாச்சியை அடுத்த பரம்பிக்குளம் அணை 72 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால், மார்ச் 26ஆம் தேதி நிலவரப்படி 54.14 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 94 கன அடி நீர்வரத்து இருக்கும் நிலையில், அணையில் இருந்து 1,120 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.



சோலையாறு அணை நிலவரம்:


வால்பாறையை அடுத்த சோலையாறு அணை 160 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மார்ச் 26ஆம் தேதி நிலவரப்படி 2.58 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 21 கன அடி நீர்வரத்து இருக்கும் நிலையில், அணையில் இருந்து 5 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.



அமராவதி அணை நிலவரம்:


திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அமராவதி அணை 90 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர்வரத்தால் மார்ச் 26ஆம் தேதி நிலவரப்படி 38.03 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தற்போது அணைக்கு நீர்வரத்து இல்லாத நிலையில், அணையில் இருந்து 30 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.



திருமூர்த்தி அணை நிலவரம்:


திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணை 60 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர்வரத்தால் மார்ச் 26ஆம் தேதி நிலவரப்படி 37.96 அடியாக நீர்மட்டம் பதிவாகியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 620 கன அடி நீர்வரத்து இருக்கும் நிலையில், அணையில் இருந்து 375 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த விவரங்களை நீர்வளத்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்வதால், அணைகளின் நீர்மட்டம் படிப்படியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...