சவுதி அரேபியாவில் கால்பந்து மைதானத்தில் வெடிகுண்டு தாக்குதல் முறியடிப்பு - ஐ.எஸ். தீவிரவாதிகள் கைது

உலக கோப்பை கால்பந்து போட்டி வருகிற 2018-ம் ஆண்டு நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து தற்போது அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதி போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சவுதி அரேபியா- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையேயான தகுதி போட்டி சவுதி அரேபியா தலைநகர் ஜெட்டாவில் உள்ள சர்வதேச கால்பந்து மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது.

இதற்கிடையே ஐ.எஸ். தீவிரவாதிகள் என சந்தேகப்படும் 8 பேரை சவுதிஅரேபிய போலீசார் கைது செய்தனர். அவர்களில் 2 பேர் பாகிஸ்தானியர்கள். தலா ஒருவர் சூடானை சேர்ந்தவர்கள் மற்ற 4 பேர் சவுதி அரேபியாவை சேர்ந்தவர்கள் ஆவர்.

இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது இப்போட்டியின் போது கால்பந்து மைதானத்தில் கார்குண்டு தாக்குதல் நடத்த ஐ.எஸ்.தீவிரவாதிகள் திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது. தற்போது இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் வெடி குண்டு தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டுள்ளது.

இது தீவிரவாதிகளின் 2-வது தாக்குதல் சதியாகும். இதற்கு முன்பு சவுதி அரேபியாவில் குவாதிப் தமாம் ஆகிய 2 நகரங்களில் தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டமிட்டனர். அச்சதி முறியடிக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக இங்கு தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.

Newsletter

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...

கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல்: கோடை வெயிலால் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு

கோவையில் வெயில் மிகுதியாக உள்ளதால் உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்த...

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தடை: அண்ணாமலை கண்டனம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவுக்கு பொதுப்பணித்துறை தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து...

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...