கோவைப்புதூரில் பட்டப்பகலில் முதியவர் கத்தியால் குத்திக் கொலை செய்த குற்றவாளி கைது : கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி வீடியோ

கோவை : கோவைப்புதூர் பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த முதியவரை சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கோவை : கோவைப்புதூர் பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த முதியவரை சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். 



கோவைப்புதூரைச் சேர்ந்தவர் ஜமில் அகமது (75). இவர் இன்று மதியம் தனது வீட்டின் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கே வந்த மர்ம நபர் முதியவரை திடீரென சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். மொத்தம் 14 குத்துகள் குத்தியதில் முதியவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர், தகவல் அறிந்து வந்த போலீசார் பிரேதத்தைக் கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 



இந்த சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், கொலை நடந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்ததில், கரும்புக்கடையை சேர்ந்த பூங்காநகரில் வசித்து வரும் யாக்கோப்பின் மகன் ரிஸ்வான் (34) தான் இந்தக் கொலையை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...