கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் நேரடியாகச் சென்று குடிநீர் விநியோக செயல்பாடுகளை ஆய்வு செய்தார். உதவி பொறியாளர் ராஜேஸ் வேணுகோபால் உடன் இருந்தார்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் குடிநீர் விநியோக செயல்பாடுகள் குறித்து மாநகராட்சி ஆணையர்மா. சிவகுரு பிரபாகரன் இன்று நேரடி ஆய்வு மேற்கொண்டார்.






கவுண்டம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியின் மூலமாக பொதுமக்களுக்கு சீரான இடைவெளியில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த விநியோக செயல்பாடுகளை நேரடியாகச் சென்று ஆணையர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.






ஆய்வின்போது, மேல்நிலை நீர்த்தேக்கத்தின் செயல்பாடு, குடிநீர் விநியோக அட்டவணை, தண்ணீர் விநியோகத்தின் தரம் மற்றும் பொதுமக்களுக்கு சீரான முறையில் தண்ணீர் கிடைக்கிறதா என்பது குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.




இந்த ஆய்வில் உதவி பொறியாளர் ராஜேஸ் வேணுகோபால் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர். குடிநீர் விநியோகத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் உடனடியாக நிவர்த்தி செய்ய ஆணையர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...