பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் வாயில் கருப்புத் துணி கட்டி எதிர்ப்பை பதிவு செய்து வெளிநடப்பு செய்தனர்.


திருப்பூர்: தேர்தல் பிரசாரத்தின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் வாயில் கருப்புத் துணி கட்டி பங்கேற்று பின்னர் வெளிநடப்பு செய்தனர்.



திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் மனீஷ் நாரணவரே தலைமையில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை அதிகாரிகளிடம் எடுத்துரைத்தனர்.



கூட்டத்தில் பங்கேற்ற தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், அரசு அறிவித்துள்ள பயிர் கடன் தள்ளுபடி திட்டம் விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிப்பதாக குற்றம்சாட்டினர். ரூ.50,000 வரை மட்டுமே முழு தள்ளுபடியும், ரூ.1 லட்சம் வரை கடன் பெற்றவர்களுக்கு ரூ.5,000 மட்டுமே தள்ளுபடி வழங்கப்படும் என்ற அறிவிப்பு விவசாயிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என தெரிவித்தனர்.

மேலும், தேர்தல் பிரசாரத்தின் போது ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பயிர் கடன்கள் முழுமையாக தள்ளு

செய்யப்படும் என அறிவிக்கப்பட்டதாகவும், தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு அந்த வாக்குறுதிக்கு முரணானதாக இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

பயிர் கடன் மட்டுமின்றி, நகைக் கடன், டிராக்டர் கடன் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த அனைத்து கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வாயில் கருப்புத் துணி கட்டி தங்களது எதிர்ப்பை பதிவு செய்த விவசாயிகள் பின்னர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

மேலும், விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என்றும் எச்சரித்தனர்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூன் 1ஆம் தேதி தமிழகம் முழுவதும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...