திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாம் வரும் 13-ம் தேதி நடக்கிறது.
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாம் வரும் 13-ம் தேதி நடக்கிறது.
வரும் சனிக்கிழமை (13-ம் தேதி) அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை அனைத்து வட்டங்களிலும் உள்ள கிராமங்களில் இந்த குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடிமைப்பொருள் தனி வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு, முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு உடனடி தீர்வு செய்ய உள்ளனர்.
அவினாசி (ஈட்டிவீரம்பாளையம்), திருப்பூர் வடக்கு (கணக்கம்பாளையம்), திருப்பூர் தெற்கு (நல்லூர்), ஊத்துக்குளி (விருமாண்டம்பாளையம்), பல்லடம் (கணபதிபாளையம்), உடுமலைப்பேட்டை (பள்ளபாளையம்), மடத்துக்குளம் (சர்க்கார்கண்ணாடி புதூர்), தாராபுரம் (தளவாய்பட்டினம்), காங்கேயம் (வெள்ளகோவில்) ஆகிய வட்டங்களின் கிராமங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாம் நடக்கிறது.
கிராம பொதுமக்கள் புதிய மின்னணு குடும்ப அட்டைகளுக்கான மனுக்களை வழங்கவும், மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், பெயர் திருத்தம் போன்ற மின்னணு குடும்ப அட்டை தொடர்பான கோரிக்கைகளை நிவர்த்தி செய்து கொள்ளவும் இந்த முகாமினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வரும் சனிக்கிழமை (13-ம் தேதி) அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை அனைத்து வட்டங்களிலும் உள்ள கிராமங்களில் இந்த குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடிமைப்பொருள் தனி வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு, முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு உடனடி தீர்வு செய்ய உள்ளனர்.
அவினாசி (ஈட்டிவீரம்பாளையம்), திருப்பூர் வடக்கு (கணக்கம்பாளையம்), திருப்பூர் தெற்கு (நல்லூர்), ஊத்துக்குளி (விருமாண்டம்பாளையம்), பல்லடம் (கணபதிபாளையம்), உடுமலைப்பேட்டை (பள்ளபாளையம்), மடத்துக்குளம் (சர்க்கார்கண்ணாடி புதூர்), தாராபுரம் (தளவாய்பட்டினம்), காங்கேயம் (வெள்ளகோவில்) ஆகிய வட்டங்களின் கிராமங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாம் நடக்கிறது.
கிராம பொதுமக்கள் புதிய மின்னணு குடும்ப அட்டைகளுக்கான மனுக்களை வழங்கவும், மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், பெயர் திருத்தம் போன்ற மின்னணு குடும்ப அட்டை தொடர்பான கோரிக்கைகளை நிவர்த்தி செய்து கொள்ளவும் இந்த முகாமினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.