கோவையில் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்கக்கோரி இன்று சாலைமறியலில் ஈடுபட்ட தி.மு.க., எம்.எல்.ஏ., நா.கார்த்திக்-ஐ போலீசார் கைது செய்தனர்.
கோவை: கோவையில் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்கக்கோரி இன்று சாலைமறியலில் ஈடுபட்ட தி.மு.க., எம்.எல்.ஏ., நா.கார்த்திக்-ஐ போலீசார் கைது செய்தனர்.
கோவை மாநகராட்சி பகுதிகளில் பழுதடைந்துள்ள சாலைகளை புதிய தார் சாலையாக மாற்றக் கோரி பீளமேடு அவினாசி பகுதியில் எம்.எல்.ஏ., நா.கார்த்திக் தலைமையில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, "கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலைகள் கடந்த ஓராண்டு காலத்திற்கும் மேலாக சாலைகள் பழுதடைந்துள்ளது. வாகனங்களிலும், நடந்தும் செல்லமுடியாத அளவிற்கு சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறது. சாலைகளை செப்பனிட்டு புதிய தார் சாலைகளாக அமைக்க வலியுறுத்தி கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மாநகராட்சி பொறியாளர்களிடமும் பலமுறை நேரிலும் , கடிதம் மூலமாகவும் எடுத்துச் சொல்லியும் இன்னும் சரிசெய்யப்படவில்லை. ஆகவே மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் , உடனடியாக தார் சாலை அமைக்க வேண்டும் இல்லாவிட்டால் தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம்" என்றார்.
இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ., உட்பட 100 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாநகராட்சி பகுதிகளில் பழுதடைந்துள்ள சாலைகளை புதிய தார் சாலையாக மாற்றக் கோரி பீளமேடு அவினாசி பகுதியில் எம்.எல்.ஏ., நா.கார்த்திக் தலைமையில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, "கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலைகள் கடந்த ஓராண்டு காலத்திற்கும் மேலாக சாலைகள் பழுதடைந்துள்ளது. வாகனங்களிலும், நடந்தும் செல்லமுடியாத அளவிற்கு சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறது. சாலைகளை செப்பனிட்டு புதிய தார் சாலைகளாக அமைக்க வலியுறுத்தி கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மாநகராட்சி பொறியாளர்களிடமும் பலமுறை நேரிலும் , கடிதம் மூலமாகவும் எடுத்துச் சொல்லியும் இன்னும் சரிசெய்யப்படவில்லை. ஆகவே மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் , உடனடியாக தார் சாலை அமைக்க வேண்டும் இல்லாவிட்டால் தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம்" என்றார்.
இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ., உட்பட 100 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.