நெல்கொள்முதல் தொடர்பான புகார்களை அளிக்க அலைபேசி எண்கள் அறிவிப்பு

நெல்கொள்முதல் செய்வது தொடர்பான புகார்களை அளிப்பதற்காக அலைப்பேசி எண்களை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல அலுவலகம் அறிவித்துள்ளது.

கோவை: நெல்கொள்முதல் செய்வது தொடர்பான புகார்களை அளிப்பதற்காக அலைப்பேசி எண்களை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல அலுவலகம் அறிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து கரீப் மார்க்கெட்டிங் பருவம் 2017-2018க்கு கீழ்க்காணும் விலையில் நெல் கொள்முதல் செய்யப்படும் என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் (கோவை மண்டலம்) தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது :- கோவை மாவட்டத்தில் ஆனைமலை மற்றும் கோட்டூர் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல்கொள்முதல் செய்யப்படுகின்றது. அதன்படி, விவசாயிகளிடமிருந்து பெறப்படும் சன்னரக நெல் ஊக்கத் தொகையுடன் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 1,660 ஆகவும், பொதுரக நெல் ஊக்கத்தொகையுடன் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,600ஆகவும், வழங்கப்படுகின்றது.

விவசாயிகளிடமிருந்து பெறப்படும் நெல்லிற்கு நேரடியாகக் கொள்முதல் நிலையத்தில் யாருக்கும் பணம் வழங்குதல் கூடாது. மாறாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லிற்குண்டான தொகை முழுவதும் நேரடியாக மின்னனுபரிவர்த்தனை மூலம் மட்டுமே விவசாயிகளின் வங்கி கணக்கில் 3 தினங்களுக்குள் வரவு வைக்கப்படும். ஈரப்பதம் 17 சதவிகிதம் வரை உள்ள தரமான நெல்லிற்கு எவ்வித பணப்பிடித்தமும் இன்றி நெல் கொள்முதல் செய்யப்படும்.

விவசாயிகள் இதுதொடர்பாக வரும் எவ்விதப் புகார்களையும் 0422-2440272 என்ற எண்ணில் கோவை முதுநிலை மண்டல மேலாளர் அவர்களையோ, 9884211417 என்ற எண்ணில் கோவை மாவட்ட மேலாளர் அவர்களையோ, 9486178971 என்ற எண்ணில் கோவை கொள்முதல் அலுவலரையோ தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...