நெல்கொள்முதல் செய்வது தொடர்பான புகார்களை அளிப்பதற்காக அலைப்பேசி எண்களை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல அலுவலகம் அறிவித்துள்ளது.
கோவை: நெல்கொள்முதல் செய்வது தொடர்பான புகார்களை அளிப்பதற்காக அலைப்பேசி எண்களை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல அலுவலகம் அறிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து கரீப் மார்க்கெட்டிங் பருவம் 2017-2018க்கு கீழ்க்காணும் விலையில் நெல் கொள்முதல் செய்யப்படும் என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் (கோவை மண்டலம்) தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது :- கோவை மாவட்டத்தில் ஆனைமலை மற்றும் கோட்டூர் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல்கொள்முதல் செய்யப்படுகின்றது. அதன்படி, விவசாயிகளிடமிருந்து பெறப்படும் சன்னரக நெல் ஊக்கத் தொகையுடன் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 1,660 ஆகவும், பொதுரக நெல் ஊக்கத்தொகையுடன் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,600ஆகவும், வழங்கப்படுகின்றது.
விவசாயிகளிடமிருந்து பெறப்படும் நெல்லிற்கு நேரடியாகக் கொள்முதல் நிலையத்தில் யாருக்கும் பணம் வழங்குதல் கூடாது. மாறாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லிற்குண்டான தொகை முழுவதும் நேரடியாக மின்னனுபரிவர்த்தனை மூலம் மட்டுமே விவசாயிகளின் வங்கி கணக்கில் 3 தினங்களுக்குள் வரவு வைக்கப்படும். ஈரப்பதம் 17 சதவிகிதம் வரை உள்ள தரமான நெல்லிற்கு எவ்வித பணப்பிடித்தமும் இன்றி நெல் கொள்முதல் செய்யப்படும்.
விவசாயிகள் இதுதொடர்பாக வரும் எவ்விதப் புகார்களையும் 0422-2440272 என்ற எண்ணில் கோவை முதுநிலை மண்டல மேலாளர் அவர்களையோ, 9884211417 என்ற எண்ணில் கோவை மாவட்ட மேலாளர் அவர்களையோ, 9486178971 என்ற எண்ணில் கோவை கொள்முதல் அலுவலரையோ தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து கரீப் மார்க்கெட்டிங் பருவம் 2017-2018க்கு கீழ்க்காணும் விலையில் நெல் கொள்முதல் செய்யப்படும் என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் (கோவை மண்டலம்) தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது :- கோவை மாவட்டத்தில் ஆனைமலை மற்றும் கோட்டூர் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல்கொள்முதல் செய்யப்படுகின்றது. அதன்படி, விவசாயிகளிடமிருந்து பெறப்படும் சன்னரக நெல் ஊக்கத் தொகையுடன் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 1,660 ஆகவும், பொதுரக நெல் ஊக்கத்தொகையுடன் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,600ஆகவும், வழங்கப்படுகின்றது.
விவசாயிகளிடமிருந்து பெறப்படும் நெல்லிற்கு நேரடியாகக் கொள்முதல் நிலையத்தில் யாருக்கும் பணம் வழங்குதல் கூடாது. மாறாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லிற்குண்டான தொகை முழுவதும் நேரடியாக மின்னனுபரிவர்த்தனை மூலம் மட்டுமே விவசாயிகளின் வங்கி கணக்கில் 3 தினங்களுக்குள் வரவு வைக்கப்படும். ஈரப்பதம் 17 சதவிகிதம் வரை உள்ள தரமான நெல்லிற்கு எவ்வித பணப்பிடித்தமும் இன்றி நெல் கொள்முதல் செய்யப்படும்.
விவசாயிகள் இதுதொடர்பாக வரும் எவ்விதப் புகார்களையும் 0422-2440272 என்ற எண்ணில் கோவை முதுநிலை மண்டல மேலாளர் அவர்களையோ, 9884211417 என்ற எண்ணில் கோவை மாவட்ட மேலாளர் அவர்களையோ, 9486178971 என்ற எண்ணில் கோவை கொள்முதல் அலுவலரையோ தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.