காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வழங்கப்படும் நீரை 14.75 டி.எம்.சி தண்ணீர் குறைத்தும் கர்நாடகத்திற்கு வழங்கப்படும் நீரின் அளவை அதிகரித்தும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வழங்கப்படும் நீரை 14.75 டி.எம்.சி தண்ணீர் குறைத்தும் கர்நாடகத்திற்கு வழங்கப்படும் நீரின் அளவை அதிகரித்தும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
காவிரி நீரை பங்கிடுவதில் பல்வேறு ஆண்டுகளாக இரு மாநிலங்களுக்கும் இடையில் பிரச்சனையை எழுந்துவந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதில், காவிரியில் தமிழகத்திற்கு இருந்து 14.75 டி.எம்.சி தண்ணீர் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 192 டி.எம்.சி. நீர் கேட்டிருந்த நிலையில் தற்போது குறைத்து வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், காவிரியில் இருந்து கர்நாடகத்திற்கு நீரை அதிகரித்து உத்தரவு வெளியாகியுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு விபரங்கள் :
* காவிரியில் தமிழகத்திற்கு இருந்து 14.75 டி.எம்.சி தண்ணீர் குறைப்பு.
* கர்நாடகத்திற்கு கூடுதல் டி.எம்.சி. நீர் வழங்க வேண்டும்.
* தமிழகத்திற்கு 177.25 தண்ணீர் மட்டுமே வழங்க முடியும்.
* பாண்டிச்சேரிக்கு மற்றும் கேரளத்திற்கு வழங்கப்படும் நீர் அளவில் எந்த மாற்றமும் இல்லை.
* தீர்ப்பை எதிர்த்து யாரும் மேல் முறையீடு செய்ய முடியாது : 15 ஆண்டுகளுக்கு இந்த தீர்ப்பு அமலில் இருக்கும்
* தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி., கர்நாடகத்திற்கு 184.75 டி.எம்.சி.
* மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.
* காவிரி மேலாண்மை வாரியம் குடியரசுத் தலைவரின் மேற்பார்வையில் செயல்பட வேண்டும்.