அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் சேவைகள், மருத்துவ வசதிகளின் தரம் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.


சென்னை: சென்னையில் மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மாநில அளவிலான இணை இயக்குநர் சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் தேனாம்பேட்டை அலுவலக வளாகத்தில் உள்ள தேசிய சுகாதாரக் குழும கலந்தாய்வுக் கூடத்தில் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் தலைமை தாங்கினார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் சேவைகள், மருத்துவ வசதிகளின் தரம் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது, அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வரும் பொதுமக்களுக்கு தரமான மருத்துவ சேவைகள் விரைவாக வழங்கப்பட வேண்டும் என்றும், நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களை உரிய மரியாதையுடன் அணுகி தேவையான சிகிச்சைகள் மற்றும் சேவைகள் உடனுக்குடன் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுறுத்தினார்.

மேலும், அரசு மருத்துவமனைகளின் தூய்மை மற்றும் தரத்தை மதிப்பீடு செய்ய வழங்கப்படும் “காயகல்ப்” தரச் சான்றிதழுக்கான ஆய்வுகளை ஆண்டிற்கு ஒருமுறை நடத்துவதற்கு பதிலாக, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை காலாண்டு அடிப்படையில் நடத்தி சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதேபோல், தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் CEA உரிமச் சான்றிதழ்களில் நிலுவையில் உள்ள சுமார் 8000 விண்ணப்பங்களுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்றும், ஆன்லைன் மூலம் தேவையான ஆவணங்கள் மற்றும் தகவல்களை பதிவேற்றம் செய்தவுடன் தற்காலிக சான்றிதழ்களை உடனடியாக வழங்கி, பின்னர் முழுமையான ஆய்வுக்குப் பிறகு நிரந்தர சான்றிதழ்கள் வழங்கும் நடைமுறையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...