காவிரி வழக்கில் இறுதித்தீர்ப்பு வெளியிடுவதை அடுத்து, தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
காவிரி வழக்கில் இறுதித்தீர்ப்பு வெளியிடுவதை அடுத்து, தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று இறுதித்தீர்ப்பு வெளியிடுவதை அடுத்து, தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர் மற்றும் கூடலூரில் இருந்து கர்நாடகாவுக்கு இயக்கப்படும் பேருந்துகள் இன்று செல்லாது என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

இதேபோல் ஓசூரில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் தமிழக அரசு பேருந்துகளும், எல்லையான ஓசூரிலேயே நிறுத்தப்பட்டன. கர்நாடகாவில் இருந்து தமிழகம் வரும் பேருந்துகள் எல்லைப் பகுதியான அத்திப்பள்ளி வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால், அந்த வழியாக செல்ல வேண்டிய பயணிகள், மிகுந்த அவதிக்கு ஆளாகினர்.

காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று இறுதித்தீர்ப்பு வெளியிடுவதை அடுத்து, தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர் மற்றும் கூடலூரில் இருந்து கர்நாடகாவுக்கு இயக்கப்படும் பேருந்துகள் இன்று செல்லாது என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

இதேபோல் ஓசூரில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் தமிழக அரசு பேருந்துகளும், எல்லையான ஓசூரிலேயே நிறுத்தப்பட்டன. கர்நாடகாவில் இருந்து தமிழகம் வரும் பேருந்துகள் எல்லைப் பகுதியான அத்திப்பள்ளி வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால், அந்த வழியாக செல்ல வேண்டிய பயணிகள், மிகுந்த அவதிக்கு ஆளாகினர்.