கோவையில் கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம் கொள்ளை

குனியமுத்தூர் பகுதியில் இன்று அதிகாலை அடுத்தடுத்து இருந்த வீடுகளுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி 19 சவரன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: குனியமுத்தூர் பகுதியில் இன்று அதிகாலை அடுத்தடுத்து இருந்த வீடுகளுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி 19 சவரன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



குனியமுத்தூர் கஸ்தூரி காடர்ன் பகுதியைச் சேர்ந்தவர் சேக் அப்துல்லா (37). இன்று அதிகாலை இவர் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டிற்குள் திடீரென அரை நிர்வாணத்தில் புகுந்த மூன்று மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். 

மேலும், அப்துல்லாவின் மனைவி அணிந்திருந்த நகை, பீரோவில் வைத்திருந்த 17 சவரன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். அதே போல் அருகே உள்ள பாஷா (46) என்பவரது வீட்டிற்குள் புகுந்த மூன்று பேர் அவரது சகோதரி அணிந்திருந்த 2 சவரன் நகையையும் மிரட்டிப் பறித்து தப்பிச் சென்றனர். 



இது தொடர்பாக, தகவலறிந்த மாநகர காவல்துறை துணை ஆணையர் லட்சுமி மற்றும் உதவி ஆணையர் ரமேஷ் கிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு நடத்தியதோடு, கொள்ளையர்கள் விட்டுச் சென்ற இரு சக்கர வாகனம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் கொள்ளையர்கள் புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி கொள்ளையடித்த சம்பவம் கோவை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதே பகுதியில் தான் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...