கோவையில் கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம் கொள்ளை

குனியமுத்தூர் பகுதியில் இன்று அதிகாலை அடுத்தடுத்து இருந்த வீடுகளுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி 19 சவரன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: குனியமுத்தூர் பகுதியில் இன்று அதிகாலை அடுத்தடுத்து இருந்த வீடுகளுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி 19 சவரன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



குனியமுத்தூர் கஸ்தூரி காடர்ன் பகுதியைச் சேர்ந்தவர் சேக் அப்துல்லா (37). இன்று அதிகாலை இவர் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டிற்குள் திடீரென அரை நிர்வாணத்தில் புகுந்த மூன்று மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். 

மேலும், அப்துல்லாவின் மனைவி அணிந்திருந்த நகை, பீரோவில் வைத்திருந்த 17 சவரன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். அதே போல் அருகே உள்ள பாஷா (46) என்பவரது வீட்டிற்குள் புகுந்த மூன்று பேர் அவரது சகோதரி அணிந்திருந்த 2 சவரன் நகையையும் மிரட்டிப் பறித்து தப்பிச் சென்றனர். 



இது தொடர்பாக, தகவலறிந்த மாநகர காவல்துறை துணை ஆணையர் லட்சுமி மற்றும் உதவி ஆணையர் ரமேஷ் கிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு நடத்தியதோடு, கொள்ளையர்கள் விட்டுச் சென்ற இரு சக்கர வாகனம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் கொள்ளையர்கள் புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி கொள்ளையடித்த சம்பவம் கோவை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதே பகுதியில் தான் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...