பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மற்றும் நீலகிரியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்களை போலிசார் கைது செய்தனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மற்றும் நீலகிரியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்களை போலிசார் கைது செய்தனர்.

ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் , குடும்ப பென்சன் வழங்கிட வேண்டும் , காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் , மகப்பேறு விடுப்பு 9 மாத காலத்திற்கு துறை ரீதியாக ஆணை வெளியிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு வந்த போலீசார் அனுமதியின்றி போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்களை கைது செய்தனர்.

இதே போல் நீலகிரி மாவட்டம் உதகை ஏ.டி.சி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட 54 பெண்கள் உட்ப்பட 70 பேரை காவல்த்துறையினர் கைது செய்தனர்.