கோவையில் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய உறவினர்கள் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
கோவை: கோவையில் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய உறவினர்கள் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
மலுமச்சம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஆட்டோ மொபைல் இரண்டாமாண்டு பயின்று வந்தவர் பிரேம்குமார். சூளகிரி பகுதியை சேர்ந்த இவர் நேற்று கல்லூரி விடுதி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் , மாணவனின் மரணத்தில் மர்மம் இருப்பதாக செட்டிபாளையம் காவல்நிலையத்தில் அவரது தந்தை விஸ்வநாதன் புகார் அளித்தார்.
இது குறித்து மாணவர் குறித்து அவரது மாமா ரமேஷ் கூறுகையில், " பிரேம்குமார் இதுவரை எந்த பிரச்சனை குறித்தும் வீட்டிற்கு தெரியப்படுத்தியதில்லை. அவர் நன்றாகப் படிக்கும் மாணவர். கல்லூரி வீடு என்று சுற்றுவட்டாரங்களில் நற்பெயரை கொண்டவர்.
கல்லூரி நிர்வாகம் பிரேமின் மரணம் தொடர்பாக முன்னுக்குப் பின் முரணாக பதில் தருகிறது. அந்த கல்லூரி வளாகத்தில் கண்காணிப்பு காமிரா இல்லை" என்றார்.
இந்த நிலையில் மாணவரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். தொடர்ந்து அவர்களுடன் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மாணவனின் உடலை பெற்றுச் சென்றனர்.
இது தொடர்பாக செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மலுமச்சம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஆட்டோ மொபைல் இரண்டாமாண்டு பயின்று வந்தவர் பிரேம்குமார். சூளகிரி பகுதியை சேர்ந்த இவர் நேற்று கல்லூரி விடுதி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் , மாணவனின் மரணத்தில் மர்மம் இருப்பதாக செட்டிபாளையம் காவல்நிலையத்தில் அவரது தந்தை விஸ்வநாதன் புகார் அளித்தார்.
இது குறித்து மாணவர் குறித்து அவரது மாமா ரமேஷ் கூறுகையில், " பிரேம்குமார் இதுவரை எந்த பிரச்சனை குறித்தும் வீட்டிற்கு தெரியப்படுத்தியதில்லை. அவர் நன்றாகப் படிக்கும் மாணவர். கல்லூரி வீடு என்று சுற்றுவட்டாரங்களில் நற்பெயரை கொண்டவர்.
கல்லூரி நிர்வாகம் பிரேமின் மரணம் தொடர்பாக முன்னுக்குப் பின் முரணாக பதில் தருகிறது. அந்த கல்லூரி வளாகத்தில் கண்காணிப்பு காமிரா இல்லை" என்றார்.
இந்த நிலையில் மாணவரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். தொடர்ந்து அவர்களுடன் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மாணவனின் உடலை பெற்றுச் சென்றனர்.
இது தொடர்பாக செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.