கல்லூரி மாணவர் தற்கொலை : உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

கோவையில் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய உறவினர்கள் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

கோவை: கோவையில் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய உறவினர்கள் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

மலுமச்சம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஆட்டோ மொபைல் இரண்டாமாண்டு பயின்று வந்தவர் பிரேம்குமார். சூளகிரி பகுதியை சேர்ந்த இவர் நேற்று கல்லூரி விடுதி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் , மாணவனின் மரணத்தில் மர்மம் இருப்பதாக செட்டிபாளையம் காவல்நிலையத்தில் அவரது தந்தை விஸ்வநாதன் புகார் அளித்தார்.

இது குறித்து மாணவர் குறித்து அவரது மாமா ரமேஷ் கூறுகையில், " பிரேம்குமார் இதுவரை எந்த பிரச்சனை குறித்தும் வீட்டிற்கு தெரியப்படுத்தியதில்லை. அவர் நன்றாகப் படிக்கும் மாணவர். கல்லூரி வீடு என்று சுற்றுவட்டாரங்களில் நற்பெயரை கொண்டவர். 

கல்லூரி நிர்வாகம் பிரேமின் மரணம் தொடர்பாக முன்னுக்குப் பின் முரணாக பதில் தருகிறது. அந்த கல்லூரி வளாகத்தில் கண்காணிப்பு காமிரா இல்லை" என்றார்.

இந்த நிலையில் மாணவரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். தொடர்ந்து அவர்களுடன் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மாணவனின் உடலை பெற்றுச் சென்றனர்.

இது தொடர்பாக செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...