டெங்கு காய்ச்சலுக்கு 10 வயது சிறுமி பலி

பல்லடத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 10 வயது சிறுமி பலியான சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: பல்லடத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 10 வயது சிறுமி பலியான சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல்லடம் அருகே சந்தமநாயக்கன் பாளையத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி சங்கர். இவரது மனைவி பாண்டியம்மாள். இவர்களுக்கு ஹரி என்ற மகனும், தாமரைச்செல்வி என்ற மகளும் உள்ளார். தாமரைச்செல்வி அப்பகுதியிலுள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பாக தாமரைச்செல்விக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் பல்லடத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தாமரைச்செல்வியின் ரத்த மாதிரிகளை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர்.

இதையடுத்து மேல் சிகிச்சைக்காக அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி தாமரைச்செல்வி உயிரிழந்தார்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் சற்றே ஓய்ந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு சிறுமி டெங்குவால் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களை பீதியடையச் செய்துள்ளது.

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...