நமது உடலில் ஏற்படும் மரபு மாற்றங்கள் மூலம் புற்றுநோய் வருகிறது - நல்ல. ஜி.பழனிச்சாமி

நமது உடலில் ஏற்படும் மரபு மாற்றங்கள் மூலம் புற்றுநோய் வருவதாக கே.எம்.சிஎச். மருத்துவமனையின் தலைவர் நல்ல. ஜி.பழனிச்சாமி கூறியுள்ளார்.


கோவை: நமது உடலில் ஏற்படும் மரபு மாற்றங்கள் மூலம் புற்றுநோய் வருவதாக கே.எம்.சிஎச். மருத்துவமனையின் தலைவர் நல்ல. ஜி.பழனிச்சாமி கூறியுள்ளார். 

கே.எம்.சிஎச். மருத்துவமனையில் மெட்ஜினோம் மரபியல் ஆய்வு மையம் தொடங்கப்பட்டுள்ளது. நோயின் உயிரியல் தன்மை குறித்து ஆராய்ச்சி செய்ய உதவும் வகையிலும், நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க துல்லியமான தகவல்களை அளிக்கும் இந்த மையத்தினை கே.எம்.சிஎச். மருத்துவமனையின் தலைவர் நல்ல பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார்.



தொடர்ந்து அவர் பேசுகையில், " கே.எம்.சிஎச். மருத்துவமனை கோவை மக்களுக்கு தரமான சிகிச்சை வழங்குவதில் முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது. இன்றைய காலகட்டத்தில் மரபணு மாற்றத்தால் புற்றுநோய் ஏற்பட்டு வருகிறது. இவ்வகை நோய்களை மரபியல் மையம் மூலம் சிகிச்சையளிக்கவும், தடுக்கவும் முடியும். இந்த மேம்பட்ட மையத்தில் மரபணு மரபணு அடிப்படையிலான தீர்வுகளை எங்கள் சிறந்த மருத்துவக்குழு வழங்கும்." என்றார்.

மெட்ஜினோம் மரபியல் ஆய்வு மையத்தின் தலைவர் சியாம் சந்தோஷ் பேசுகையில், " இந்த மையம் நவீன தொழில் நுட்பத்துடன் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க உதவிகரமாக இருக்கும். இந்த துறையில் மேலும் பல ஆராய்ச்சிகள் மூலம் பல்வேறு நோய்களுக்கு தீர்வுக்கான நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறோம்." என்றார்.



"நோய்கள் குறைவான சமுதாயத்தை உருவாகுவது எங்கள் மருத்துவமனைக்கு முக்கிய நோக்கம். இந்த மையம் கர்ப்ப காலத்தில் குழந்தையின் குறைபாடுகளை கண்டுபிடிக்க உதவும்" என்று மெட்ஜினோம் மரபியல் ஆய்வு மைய மருத்துவர் கிருஷ்ண சாமிநாதன் தெரிவித்தார். 

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...