நமது உடலில் ஏற்படும் மரபு மாற்றங்கள் மூலம் புற்றுநோய் வருவதாக கே.எம்.சிஎச். மருத்துவமனையின் தலைவர் நல்ல. ஜி.பழனிச்சாமி கூறியுள்ளார்.
கோவை: நமது உடலில் ஏற்படும் மரபு மாற்றங்கள் மூலம் புற்றுநோய் வருவதாக கே.எம்.சிஎச். மருத்துவமனையின் தலைவர் நல்ல. ஜி.பழனிச்சாமி கூறியுள்ளார்.
கே.எம்.சிஎச். மருத்துவமனையில் மெட்ஜினோம் மரபியல் ஆய்வு மையம் தொடங்கப்பட்டுள்ளது. நோயின் உயிரியல் தன்மை குறித்து ஆராய்ச்சி செய்ய உதவும் வகையிலும், நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க துல்லியமான தகவல்களை அளிக்கும் இந்த மையத்தினை கே.எம்.சிஎச். மருத்துவமனையின் தலைவர் நல்ல பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், " கே.எம்.சிஎச். மருத்துவமனை கோவை மக்களுக்கு தரமான சிகிச்சை வழங்குவதில் முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது. இன்றைய காலகட்டத்தில் மரபணு மாற்றத்தால் புற்றுநோய் ஏற்பட்டு வருகிறது. இவ்வகை நோய்களை மரபியல் மையம் மூலம் சிகிச்சையளிக்கவும், தடுக்கவும் முடியும். இந்த மேம்பட்ட மையத்தில் மரபணு மரபணு அடிப்படையிலான தீர்வுகளை எங்கள் சிறந்த மருத்துவக்குழு வழங்கும்." என்றார்.
மெட்ஜினோம் மரபியல் ஆய்வு மையத்தின் தலைவர் சியாம் சந்தோஷ் பேசுகையில், " இந்த மையம் நவீன தொழில் நுட்பத்துடன் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க உதவிகரமாக இருக்கும். இந்த துறையில் மேலும் பல ஆராய்ச்சிகள் மூலம் பல்வேறு நோய்களுக்கு தீர்வுக்கான நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறோம்." என்றார்.

"நோய்கள் குறைவான சமுதாயத்தை உருவாகுவது எங்கள் மருத்துவமனைக்கு முக்கிய நோக்கம். இந்த மையம் கர்ப்ப காலத்தில் குழந்தையின் குறைபாடுகளை கண்டுபிடிக்க உதவும்" என்று மெட்ஜினோம் மரபியல் ஆய்வு மைய மருத்துவர் கிருஷ்ண சாமிநாதன் தெரிவித்தார்.