சுற்றுலா பயணிகளால் கண்டுகொள்ளப்படாத உதகை மரவியல் பூங்கா

பராமரிக்கப்பட்ட உதகை மரவியல் பூங்கா தொடர்பாக முறையான விழிப்புணர்வு இல்லாததால், அதனை சுற்றுலா பயணிகள் கண்டுகொள்ளாத நிலை ஏற்பட்டுள்ளது.

உதகை : பராமரிக்கப்பட்ட உதகை மரவியல் பூங்கா தொடர்பாக முறையான விழிப்புணர்வு இல்லாததால், அதனை சுற்றுலா பயணிகள் கண்டுகொள்ளாத நிலை ஏற்பட்டுள்ளது.



சுற்றுலா நகரம் என்றழைக்கப்படும் உதகையில் பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. குறிப்பாக, அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களில் மலர்களைக் காணவே அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு மாறுதல் ஏற்படுத்தும் வகையில், படகு இல்ல மறுகரையில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் கடந்த 1982-ம் ஆண்டு பல்வேறு வகையான குளிர்பிரதேசங்களில் இருந்து 60 வகையான அரிய மரக்கன்றுகளை நடவு செய்யப்பட்டது. காலப்போக்கில் போதிய வேலிகள் இல்லாததால் பராமரிக்கப்படாமல் இருந்தது.



இதனையடுத்து, மீண்டும் இப்பூங்காவை பொலிவுபடுத்தும் வகையில், கடந்த 2007-ம் ஆண்டு சிறப்பு மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் சுமார் 14 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இப்பூங்கா அழகான, அமைதியான, சுற்றுச்சூழல் சிறிதும் மாசுபடாமல் இருந்து வருகிறது. எனவே, உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு தெரியப்படுத்தும் வகையில் விளம்பரங்களைச் செய்தால் இப்பூங்காவின் அழகு அனைவராலும் ஆதரிக்கப்படும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...