நகை பறிப்பு கொள்ளையர்கள் குறித்த சி.சி.டி.வி. காட்சிகள் வெளியீடு

மாநகரில் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் குறித்த சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்.


கோவை: மாநகரில் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் குறித்த சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்.



கோவை மாநகரை குற்றமில்லா நகரமாக மாற்ற காவல்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்து சிறையிலடைக்கும் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர் கோவை மாநகர போலீசார்.



இந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக ராமநாதபுரம், போத்தனூர், சுந்தராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து செயின் பறித்து சென்றவர்களை கண்காணிப்பு காமிராக்களில் பதிவான காட்சிகள் மூலம் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.



அந்த காட்சியில், இரு சக்கர வாகனத்தில் வரும் இரண்டு வாலிபர்கள் சாலையில் நடந்து செல்லும் பெண்ணிடம் நகையை பறித்து செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் இடம் பெற்றுள்ள நபர்கள் குறித்து விபரம் தெரிந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...