நகை பறிப்பு கொள்ளையர்கள் குறித்த சி.சி.டி.வி. காட்சிகள் வெளியீடு

மாநகரில் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் குறித்த சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்.


கோவை: மாநகரில் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் குறித்த சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்.



கோவை மாநகரை குற்றமில்லா நகரமாக மாற்ற காவல்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்து சிறையிலடைக்கும் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர் கோவை மாநகர போலீசார்.



இந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக ராமநாதபுரம், போத்தனூர், சுந்தராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து செயின் பறித்து சென்றவர்களை கண்காணிப்பு காமிராக்களில் பதிவான காட்சிகள் மூலம் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.



அந்த காட்சியில், இரு சக்கர வாகனத்தில் வரும் இரண்டு வாலிபர்கள் சாலையில் நடந்து செல்லும் பெண்ணிடம் நகையை பறித்து செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் இடம் பெற்றுள்ள நபர்கள் குறித்து விபரம் தெரிந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...