பள்ளி மாணவர்கள் தங்களது முயற்சிகளை நடைமுறைப்படுத்தலின் மூலமாக, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முயல வேண்டும் எனக் கோவை மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவர்கள் தங்களது முயற்சிகளை நடைமுறைப்படுத்தலின் மூலமாக, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முயல வேண்டும் எனக் கோவை மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சியும், அறம் அறக்கட்டளையும் இணைந்து மாவட்டத்தில் பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களின் நலனுக்காக ஏரோ, ஆஸ்ட்ரோ கிளப்பினை உருவாக்கியுள்ளது. இதனை மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயன் இன்று தொடங்கி வைத்தார். அப்போது, 6 அங்குலம் நீளமுடைய டோப்சோனியன் தொலைநோக்கியை வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் பேசுகையில். பள்ளி மாணவர்கள் தங்களது முயற்சிகளை நடைமுறைப்படுத்தலின் மூலமாக, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முயல வேண்டும், எனது பள்ளி பருவத்தில் குறைந்த செலவிலான கோளரங்கம் அமைப்பதில் முதல் பரிசைப் பெற்றேன். அதுபோல, அறிவியல் தொடர்பான நிகழ்ச்சிகளில் பள்ளி மாணவர்கள் முதல் பரிசை வெல்ல முயற்சி செய்ய வேண்டும். என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கல்வி அதிகாரி உமா, மாநகராட்சி பள்ளியின் மாணவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


கோவை மாநகராட்சியும், அறம் அறக்கட்டளையும் இணைந்து மாவட்டத்தில் பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களின் நலனுக்காக ஏரோ, ஆஸ்ட்ரோ கிளப்பினை உருவாக்கியுள்ளது. இதனை மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயன் இன்று தொடங்கி வைத்தார். அப்போது, 6 அங்குலம் நீளமுடைய டோப்சோனியன் தொலைநோக்கியை வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் பேசுகையில். பள்ளி மாணவர்கள் தங்களது முயற்சிகளை நடைமுறைப்படுத்தலின் மூலமாக, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முயல வேண்டும், எனது பள்ளி பருவத்தில் குறைந்த செலவிலான கோளரங்கம் அமைப்பதில் முதல் பரிசைப் பெற்றேன். அதுபோல, அறிவியல் தொடர்பான நிகழ்ச்சிகளில் பள்ளி மாணவர்கள் முதல் பரிசை வெல்ல முயற்சி செய்ய வேண்டும். என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கல்வி அதிகாரி உமா, மாநகராட்சி பள்ளியின் மாணவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
