ஜபல்பூரில் இருந்து கோவை-க்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை ஜூலை மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவை: ஜபல்பூரில் இருந்து கோவை-க்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவை ஜூலை மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, இந்திய ரயில்வேயின் டிவிட்டர் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, " மழைக் கால அட்டவணையின் படி ஜபல்பூரில் இருந்து கோவை-க்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் 7 முதல் ஜூன் 9 வரையில் இந்த சிறப்பு ரயில் சேவை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கூடுதலாக ஜூன் 10 தொடங்கி ஜூலை 2-ம் தேதி வரை இந்த ரயில் மழைக் கால அட்டவணைப் படி இயங்கும்.
ஜபல்பூரில் இருந்து சனிக்கிழமை தோறும் புறப்படும் இந்த சிறப்பு ரயில் மங்களூர், உடுப்பி, கோவா, பன்வேல், இடார்ஸி வழியாகச் சென்று திங்கட்கிழமையன்று கோவையை அடையும்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, இந்திய ரயில்வேயின் டிவிட்டர் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, " மழைக் கால அட்டவணையின் படி ஜபல்பூரில் இருந்து கோவை-க்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் 7 முதல் ஜூன் 9 வரையில் இந்த சிறப்பு ரயில் சேவை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கூடுதலாக ஜூன் 10 தொடங்கி ஜூலை 2-ம் தேதி வரை இந்த ரயில் மழைக் கால அட்டவணைப் படி இயங்கும்.
ஜபல்பூரில் இருந்து சனிக்கிழமை தோறும் புறப்படும் இந்த சிறப்பு ரயில் மங்களூர், உடுப்பி, கோவா, பன்வேல், இடார்ஸி வழியாகச் சென்று திங்கட்கிழமையன்று கோவையை அடையும்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.