திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு 1 லட்சத்து 10 ஆயிரத்து எட்டு சிவலிங்கங்களை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தியது உலக சாதனை பதிவில் இடம்பிடித்துள்ளது.
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு 1 லட்சத்து 10 ஆயிரத்து எட்டு சிவலிங்கங்களை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தியது உலக சாதனை பதிவில் இடம்பிடித்துள்ளது.

தாராபுரம் வாசவி மஹாலில் மகாசிவராத்திரி விழாவையொட்டி பெண்கள் அரிசிமாவு ,சந்தனம் ஆகியவற்றை கொண்டு மூன்று மாதங்களாக தயாரித்த 1 லட்சத்து 10 ஆயிரத்து எட்டு சிவலிங்கங்களை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். சிவராத்திரி அன்று சிவலிங்கத்தை தரிசனம் செய்தால் புண்ணியம் உண்டாகும் என முன்னோர்கள் கூறியிருக்கும் நிலையில், அனைத்து மக்களும் ஒரே நேரத்தில் 1 லட்சத்து 10 ஆயிரத்து எட்டு சிவலிங்கங்களை தரிசனம் செய்தனர். அனைத்து நலங்களையும் பெறவேண்டும் என்பதற்காக நடத்தபட்ட இந்த வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிவ வழிபாடு செய்தனர்.
மேலும், 1 லட்சத்து 10 ஆயிரத்து எட்டு சிவலிங்கங்களை கொண்டு அமைக்கப்பட்ட மிகப்பெரிய சிவலிங்கத்தின் தோற்றத்தை வோர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பினர் பார்வையிட்டனர். இதை உலக சாதனை பட்டியலில் சேர்த்து, அதற்கான விருதினை சிவலிங்கங்கள் செய்த பெண்களுக்கு வழங்கி பாராட்டு தெரிவித்தனர். உலக சாதனை பெற்ற சிவலிங்கத்தை காண ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

தாராபுரம் வாசவி மஹாலில் மகாசிவராத்திரி விழாவையொட்டி பெண்கள் அரிசிமாவு ,சந்தனம் ஆகியவற்றை கொண்டு மூன்று மாதங்களாக தயாரித்த 1 லட்சத்து 10 ஆயிரத்து எட்டு சிவலிங்கங்களை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். சிவராத்திரி அன்று சிவலிங்கத்தை தரிசனம் செய்தால் புண்ணியம் உண்டாகும் என முன்னோர்கள் கூறியிருக்கும் நிலையில், அனைத்து மக்களும் ஒரே நேரத்தில் 1 லட்சத்து 10 ஆயிரத்து எட்டு சிவலிங்கங்களை தரிசனம் செய்தனர். அனைத்து நலங்களையும் பெறவேண்டும் என்பதற்காக நடத்தபட்ட இந்த வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிவ வழிபாடு செய்தனர்.
மேலும், 1 லட்சத்து 10 ஆயிரத்து எட்டு சிவலிங்கங்களை கொண்டு அமைக்கப்பட்ட மிகப்பெரிய சிவலிங்கத்தின் தோற்றத்தை வோர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பினர் பார்வையிட்டனர். இதை உலக சாதனை பட்டியலில் சேர்த்து, அதற்கான விருதினை சிவலிங்கங்கள் செய்த பெண்களுக்கு வழங்கி பாராட்டு தெரிவித்தனர். உலக சாதனை பெற்ற சிவலிங்கத்தை காண ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.