உலக சாதனை பட்டியலில் இடம்பிடித்த 1,10,008 சிவலிங்க சிறப்பு வழிபாடு

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு 1 லட்சத்து 10 ஆயிரத்து எட்டு சிவலிங்கங்களை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தியது உலக சாதனை பதிவில் இடம்பிடித்துள்ளது.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு 1 லட்சத்து 10 ஆயிரத்து எட்டு சிவலிங்கங்களை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தியது உலக சாதனை பதிவில் இடம்பிடித்துள்ளது.  



தாராபுரம் வாசவி மஹாலில் மகாசிவராத்திரி விழாவையொட்டி பெண்கள் அரிசிமாவு ,சந்தனம் ஆகியவற்றை கொண்டு மூன்று மாதங்களாக தயாரித்த 1 லட்சத்து 10 ஆயிரத்து எட்டு சிவலிங்கங்களை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். சிவராத்திரி அன்று சிவலிங்கத்தை தரிசனம் செய்தால்  புண்ணியம் உண்டாகும் என முன்னோர்கள் கூறியிருக்கும் நிலையில், அனைத்து மக்களும் ஒரே நேரத்தில் 1 லட்சத்து 10 ஆயிரத்து எட்டு சிவலிங்கங்களை தரிசனம் செய்தனர். அனைத்து நலங்களையும் பெறவேண்டும் என்பதற்காக நடத்தபட்ட இந்த வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிவ வழிபாடு செய்தனர்.

மேலும், 1 லட்சத்து 10 ஆயிரத்து எட்டு சிவலிங்கங்களை கொண்டு அமைக்கப்பட்ட மிகப்பெரிய சிவலிங்கத்தின் தோற்றத்தை வோர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பினர் பார்வையிட்டனர். இதை உலக சாதனை பட்டியலில் சேர்த்து, அதற்கான விருதினை சிவலிங்கங்கள் செய்த பெண்களுக்கு வழங்கி பாராட்டு தெரிவித்தனர். உலக சாதனை பெற்ற சிவலிங்கத்தை காண ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். 

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...